நல்ல மருந்திம் மருந்து
வேலை சொன்ன வழியில் இரண்டு வார்த்தைகள் ம் என்று முடிகிறது. ஒன்று எல்லாம். மற்றொன்று இருக்கும். பல்லாயிரக்கணக்கான மந்திர வார்த்தைகளை வள்ளலார் திருவருட்பாவில் கையாண்டுள்ளார். அவற்றில் சில,
அருட்சிவ பதியாம், ஈனம் இன்று, உரை மனம், ஓங்கும், ஊக்கமும், உணர்ச்சியும், ஒளிதரும், ஆக்கையும், ஆக்கமும், பிறப்பெனும், ஐயமும், திரிபும், இவை விரிக்கின் பெருகும்.
நல்ல மருந்து மருந்து சுகம் நல்கும் வைத்திய நாத மருந்து. இந்த மருந்தை நாதமாக குறிப்பிடுகின்றார். நாதம் என்பது சப்தம் என பொருள்படும். உடலை நிச்சய உடலாக மாற்றுவதற்கு மூன்று முக்கியமான விஷயங்கள் உள்ளன. அவை மணி மந்திரம் அவுஷதம். இவை மூன்றுமே மருந்துகள் தான். முதலாவதாக உள்ள மணி என்பது மிகவும் உயர்ந்த நிலையில் உள்ள மகான்களால் உங்களுடைய உடலில் உற்பத்தி செய்து கொள்ளக்கூடிய விஷயம். இதற்கு மிக உயர்ந்த ஒழுக்க நெறியில் நின்றால் உனது உடலில் இருக்கக்கூடிய விந்தானது மணியாக மாறிவிடும். அடுத்ததாக மந்திரம். திரு தான் வள்ளலார் குறிப்பிட்டுள்ள நாத மருந்து. மந்திரத்தை உச்சரிக்கும் போது சப்தம் உண்டாகும். இந்த மந்திரத்தை ஓத ஓத நமது உடலில் ஒரு உணர்வுநிலை vibration ஏற்பட்டு அது மருந்தாக செயல்பட ஆரம்பிக்கும். முதலில் நமது உடம்பில் ஏற்படக்கூடிய பிணிகளை இந்த மருந்தினால் நாம் எடுத்துக்கொள்ள முடியும். நாளடைவில் இந்த பயிற்சியை மேற்கொண்டு வந்தால் பிணியால் பாதிக்கப்பட்ட மற்ற மனிதர்களின் துன்பத்தையும் நம்மால் போக்க முடியும். அதுதான் முடிவான சன்மார்க்க சுகம்.
உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறு எல்லாம் விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க சுத்தசன் மார்க்க சுகநிலை பெறுக உத்தமன் ஆகுக ஓங்குக என்கின்றார் வள்ளலார்.
இன்றைக்கும் கைக்குழந்தைகளுக்கு ஏதாவது கண்டுபிடிக்கமுடியாத பிணி பயம் ஏற்பட்டால் அவற்றை நீக்குவதற்கு எல்லா மதத்தைச் சேர்ந்த தாய்மார்களும் குழந்தைகளை எடுத்துக்கொண்டு முகமதியர்களின் கோரி வாசலில் நிற்பார்கள். அங்கே அல்லாஹ் ஓதும் பெரியவர்கள் குழந்தைகளை தங்கள் வாயால் ஊதி மந்திரம் ஜெபிப்பார்கள். இந்த நேரத்தில் அந்தக் குழந்தைகளின் பிணி பயம் நீங்கிவிடும். இது நடைமுறை உண்மை. இதுவும் ஒரு நாத மந்திரம்தான்.
மேற்சொல்லப்பட்ட மணி மற்றும் மந்திரம் இவற்றை கையாள முடியாதவர்கள் அவ்ஷிதம் என்று சொல்லக்கூடிய மருந்தை பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது மூலிகை மாத்திரை கஷாயம் லேகியம் போன்றவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நல்ல மருந்து என்று சமயத்தில் இருந்த போது வள்ளலார் பாடினார். அவரே சமயத்தை விட்டு சுத்த சன்மார்க்கத்திற்கு வந்தபிறகு,
ஞான மருந்திம் மருந்து சுகம் நல்கிய சிற்சபாநாத மருந்து.
முதலில்நல்கும் என்று எதிர்காலத்தில் சொன்னவர், பின்னர் நல்கிய என்று இறந்த காலத்தில் கூறுகின்றார். இரண்டிலும் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் இரண்டு மந்திரமும் நாத மந்திரம் தான்.
வாழ்க வாழ்க நாதனே.
அருமை ஐயா...🙏🙏🙏
ReplyDelete