Wednesday, 14 January 2026

சன்மார்க்கத்தின் தற்போதய நிலை

 சன்மார்க்கத்தின் தற்போதைய நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

சன்மார்க்கத்தில் உள்ளவர்கள் 95% பேர் சங்கிகளாகவும் RSS மற்றும் BJP யை சார்ந்தவர்களாக உள்ளனர்.  இவர்கள் சமயத்தை சார்ந்தவர்களாக உள்ளனர்.

சமயத்தை விட்டால் தான் சன்மார்க்கத்திற்கே வரமுடியும் என்பது இவர்களுக்கு புரிவதில்லை.

அதுமட்டும் அல்லாமல் இந்து மதத்தை தவிர பிற மதங்களை தாக்கி பேசும் (புற சமய தூஷனை ) நபர்களாக உள்ளனர்.

வள்ளலார் 63 நாயன்மார்கள் + 12 ஆழ்வார்கள் + 20 மதங்கள் (கிருஸ்துவம், முகமதீயம் உட்பட ) + 1 கடவுள் நிலை = 96 தத்துவங்கள் என வள்ளலார் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பைபிளில் 7 நாட்களில் இறைவன் உலகை படைத்தான் என்று சொல்லப்படுவது குறித்து எமக்கு தெரியும் என்று சொல்லி அதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.

அனைத்து மதங்களையும் வள்ளலார் சமமாக தான் பார்த்தார்.  ஆனால் தற்போது உள்ள சன்மார்கிகள் என்று தங்களை தாங்களே குறிக்கொல்பவர்களுக்கு இது விளங்கவே இல்லை.

வெளிநாட்டில் உள்ள கிருத்துவர்களை இந்து மதத்திற்கு மாற்றி பட்டை அடித்து கொட்டை மாட்டி அசுத்த சன்மார்க்கத்திற்கு அழைத்து வருகிறார்கள்.

வள்ளலார் உலகர் அனைவரையும் சன்மார்க்கத்திற்கு அழைத்து வர பாடு பட்டார்.  இவர்கள் அனைவரையும் சமயத்திற்கு அழைத்து வர பாடுபடுகிறார்கள்.

அந்த அந்த மதத்தில் உள்ளவர்களை அப்படியே சன்மார்க்கத்திற்கு வரவழைப்பது தான் சன்மார்க்கம்.  அதை விடுத்து அவர்களை பட்டை அடிக்க வைத்து தான் சன்மார்க்கத்திற்கு கொண்டுவர வேண்டும் என்ற அவசியம் இல்லை.  அப்படி இருந்தால் வள்ளலார் சொல்லி இருப்பாரே?

தற்போது உள்ள சன்மார்கிகள் பலரும் சாத்தன்களை போல வேலை செய்கிறார்கள்.

இவர்களிடம் மிகவும் எச்சரிக்கை தேவை.

No comments:

Post a Comment