Sunday, 9 August 2026

ஜோதி தரிசனம்

 


https://youtu.be/y9nD4ucnkAw?si=p49PRWWbtmbjfzEn


  • ஜோதி தரிசனம் அல்லது ஜோதி           வழிபாடு(டிசம்பர் மாதம் 2025 ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு அரசின் சுத்த சன்மார்க்க மாநாட்டுக்காக நான் எழுதிய கட்டுரை.  கட்டுரை வெளிவரவில்லை.  எனவே பிளாக்கரில் வெளியிடுகிறேன். )
உலக மக்கள் அனைவரையும் சன்மார்க்க சங்கம் அடைவித்திட வள்ளலார் கண்ட எளிய வழிமுறைதான் ஜோதி தரிசனம் அல்லது ஜோதி வழிபாடு.  சுப்ரமணியம் என்ற கட்டுரையில் வள்ளலார் மனிதர்களை நான்கு வகையாக பிரிப்பார். 
1) பக்தி காண்டி 
2) கர்ம கண்டி 
3) யோகிகள் 
4) ஞானியர். 

இதில் கீழ் நிலையில் உள்ள பக்தி காண்டிகள் கடவுளை சிலா ரூபத்தில் தரிசிப்பார்கள்.  இரண்டாவது நிலையில் உள்ள கர்ம காண்டிகள் கடவுளை தீப வடிவில் தரிசிப்பார்கள்.  மூன்றாவது நிலையில் உள்ள யோகிகள் கடவுளை தங்களுக்குள்ளேயே தரிசிப்பார்கள்.  நான்காவது நிலையில் உள்ள ஞானிகள் கடவுளை எங்கும் தரிசிப்பார்கள்.  இதில் முதல் நிலையில் உள்ள பக்தி காண்டிகள் சமயவாதிகள் ஆவர்.  இவர்கள் இரண்டாவது நிலைக்கு வரும்போது அதாவது தீப தரிசனம் செய்யும்பொழுது தான் சன்மார்க்க நிலையை அடைகிறார்கள்.  கீழ் நிலையில் இருந்த நம்மை இரண்டாவது நிலைக்கு எடுத்துச் சென்று சன்மார்க்கத்தை அறிமுகப்படுத்தியவர் தான் வள்ளலார்.  அதற்குப் பிறகு மூன்றாவது நிலைக்கு நான்காவது நிலைக்கு நாம் செல்வதை கடவுளே பார்த்துக் கொள்வார்.  இந்த நான்கு நிலைகளையும் நான்கு ஒழுக்கங்களோடு நாம் பொருத்தி பார்த்துக் கொள்ளலாம்.

வள்ளலார் அருளிய விண்ணப்பங்கள், பேருபதேசம், ஞான சரியை ஆகியவைகளை சுத்த சன்மார்க்க விளக்க நூல்களாக எடுத்துக் கொள்ளலாம்.  இவற்றில் ஜோதி வழிபாடு பற்றிய குறிப்புகள் மிகக் குறைவாகவே உள்ளது.  இதனைப் படித்து புரிந்து கொண்டவர்கள் ஜோதி வழிபாட்டை புறக்கணித்து வருகிறார்கள்.  இது மிகவும் தவறு. இவர்கள் இதை ஏட்டளவில் படித்து புரிந்து கொண்டவர்களே தவிர உண்மையில் மூன்றாவது மற்றும் நான்காவது நிலைக்கு வந்தவர்கள் இல்லை.  படிப்பு அறிவு என்பது வேறு.  அனுபவ அறிவு என்பது வேறு.  நாம் மூன்றாவது மற்றும் நான்காவது நிலைக்கு வந்தாலும், வள்ளலார் நமக்கு கொடுத்த பாதையான, உலக மக்கள் அனைவரையும் சன்மார்க்க சங்கம் அடை வைத்திட நாம் எடுத்துக் கொள்ளும் முயற்சிக்கு ஜோதி தரிசனம் மிகவும் அவசியம். 

பஞ்சபூதங்களில் நடுநாயகமாக விளங்குவது தீ ஆகும்.  அதேபோல கருங்குழி, தர்மச்சாலை, மேட்டுக்குப்பம் இவை எல்லாவற்றுக்கும் நடு நாயகமாக இருப்பது ஞானசபை.  ஜோதி தரிசனமே ஞான சபையின் முக்கியத்துவம்.  இந்த ஞான சபையில் ஜோதியனை வந்து வந்து தரிசித்தால், பல மகத்துவங்களையும் அற்புதங்களையும் காணலாம் என வள்ளலார் தெரிவித்துள்ளார். 

சத்திய ஞான சபையை என்னுள் கண்டனன்.  சன்மார்க்க சித்தியை நான் பெற்றுக் கொண்டனன் என்பது வள்ளலார் வாக்கியம்.  இப்படி அவர் சொல்லும் பொழுது அவர் மூன்றாவது நிலைக்கு வந்துவிட்டார் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.  அதேபோலவே நாமும் ஜோதியையும் ஞான சபையையும் நம்முள் காண முயற்சி மேற்கொள்ள வேண்டும்.  ஜோதி ஒன்றையே நினைமின், ஒளியை நினைமின், என்று பல பாடல்களில் தெரிவித்துள்ளார்.  வள்ளலார் மேல் நிலையில் நின்று நமக்கு உபதேசம் செய்த பேருபதேசம் என்ற பகுதியில் இறைவன், 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 
என்ற மகா மந்திரத்தை தானே எடுத்துக் கொண்டார் என வள்ளலார் உபதேசித்துள்ளார்.  இங்கே வள்ளலார் அருள் என்பதும் கருணை என்பதும் ஒரே பொருளைக் குறிக்கும் இரண்டு வார்த்தைகள் என குறிப்பிட்டு மேலே தொடர்வார்.  ஆனால் ஜோதி என்பதை குறிப்பிடாமல் இருப்பார்.  மகா மந்திரத்தை நாம் படிப்பதும் எழுதுவது மட்டும் போதாது . அதை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் எனறால் ஒரு விளக்கில் தீபத்தை ஏற்றி வழிபாடு செய்தால்தான் முடியும்.

விளக்கை ஏற்றி வழிபாடு செய்ய அது நம்மை வெட்டவெளி வழிபாட்டிற்கு அழைத்துச் செல்லும்.  விளக்கை ஏற்றி வெளியை அறிமின் என்பது திருமூலர் வாக்கு.  வள்ளலார் தான் திருக்காப்பிட்டு கொள்வதற்கு முன் கடைசியாக தன்னுடைய அறையில் இருந்த விளக்கை கொண்டு வந்து வெளியில் வைக்கிறார்.  இந்த தீபத்தின் முன்னிலையில் ஆண்டவன் விளங்குவதாக பாவித்து ஞான சரியை என்ற தலைப்பில் உள்ள 28 பாசுரங்களை பாடி வழிபாடு செய்ய மக்களை கேட்டுக்கொள்கிறார்.  அறைக்குள் இருந்த தீபத்தை அறைக்கு வெளியே கொண்டு வந்து வைக்கிறார் என்பது ஒளி வழிபாடு ஆனது வெளி வழிபாடாக மாறும் என்ற தத்துவத்தை குறிக்க நடந்த ஒரு நிகழ்வு.  தினந்தோறும் தீப வழிபாடு என்பது நம்முடைய முக்கிய கொள்கையாக இருக்க வேண்டும்.  தீப வழிபாடு செய்பவர்களைத்தான் மேல்நிலைக்கு வள்ளலார் ஏற்றுவார்.  மக்களை சன்மார்க்கத்திற்கு அழைத்துச் செல்ல வள்ளலார் வைத்திருக்கும் ஒரு வழி இதுதான்.  தீப வழிபாடு ஒரு சத் விசாரமாக அமையும்.  முடியாத  காலங்களில் நாம் பரோபகாரத்தை செய்ய வேண்டும்.  அதாவது ஜீவகாருண்ய வசத்தராய் இருத்தல் வேண்டும்.
-- தில்லை திருமாவளவன் 
9840348094.



.

Wednesday, 14 January 2026

சன்மார்க்கத்தின் தற்போதய நிலை

 சன்மார்க்கத்தின் தற்போதைய நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

சன்மார்க்கத்தில் உள்ளவர்கள் 95% பேர் சங்கிகளாகவும் RSS மற்றும் BJP யை சார்ந்தவர்களாக உள்ளனர்.  இவர்கள் சமயத்தை சார்ந்தவர்களாக உள்ளனர்.

சமயத்தை விட்டால் தான் சன்மார்க்கத்திற்கே வரமுடியும் என்பது இவர்களுக்கு புரிவதில்லை.

அதுமட்டும் அல்லாமல் இந்து மதத்தை தவிர பிற மதங்களை தாக்கி பேசும் (புற சமய தூஷனை ) நபர்களாக உள்ளனர்.

வள்ளலார் 63 நாயன்மார்கள் + 12 ஆழ்வார்கள் + 20 மதங்கள் (கிருஸ்துவம், முகமதீயம் உட்பட ) + 1 கடவுள் நிலை = 96 தத்துவங்கள் என வள்ளலார் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பைபிளில் 7 நாட்களில் இறைவன் உலகை படைத்தான் என்று சொல்லப்படுவது குறித்து எமக்கு தெரியும் என்று சொல்லி அதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.

அனைத்து மதங்களையும் வள்ளலார் சமமாக தான் பார்த்தார்.  ஆனால் தற்போது உள்ள சன்மார்கிகள் என்று தங்களை தாங்களே குறிக்கொல்பவர்களுக்கு இது விளங்கவே இல்லை.

வெளிநாட்டில் உள்ள கிருத்துவர்களை இந்து மதத்திற்கு மாற்றி பட்டை அடித்து கொட்டை மாட்டி அசுத்த சன்மார்க்கத்திற்கு அழைத்து வருகிறார்கள்.

வள்ளலார் உலகர் அனைவரையும் சன்மார்க்கத்திற்கு அழைத்து வர பாடு பட்டார்.  இவர்கள் அனைவரையும் சமயத்திற்கு அழைத்து வர பாடுபடுகிறார்கள்.

அந்த அந்த மதத்தில் உள்ளவர்களை அப்படியே சன்மார்க்கத்திற்கு வரவழைப்பது தான் சன்மார்க்கம்.  அதை விடுத்து அவர்களை பட்டை அடிக்க வைத்து தான் சன்மார்க்கத்திற்கு கொண்டுவர வேண்டும் என்ற அவசியம் இல்லை.  அப்படி இருந்தால் வள்ளலார் சொல்லி இருப்பாரே?

தற்போது உள்ள சன்மார்கிகள் பலரும் சாத்தன்களை போல வேலை செய்கிறார்கள்.

இவர்களிடம் மிகவும் எச்சரிக்கை தேவை.

Sunday, 17 December 2023

சன்மார்க்கம்-3

 சன்மார்க்கம் என்றால் ஒன்றும் இல்லாதது.  வெட்ட வெளியாக இருப்பது.  ஏதாவது ஒன்று இருக்கிறது என்று சொன்னால் அது சன்மார்க்கம் இல்லை.  சரி வள்ளலார் சன்மார்க்கியா அல்லது சமயவாதியா?  என்று கேட்டால் அவர் சன்மார்க்கி என்றுதான் சொல்ல வேண்டும்.  அவர் சமயவாதி இல்லை என்பதற்கு பல ஆதாரங்கள் இருக்கின்றன.


 ஆதாரங்கள்


 1)  அவர் சமயவாதியை போல் தன்னை வெளிக்காட்டி கொள்ளவில்லை.


2)  சமயவாதிகளை போல் அவர் காவி அணியவில்லை.


3)  சமயவாதிகளை போல் வேஷம் கட்டிக் கொள்ளவில்லை.


4)  சமயவாதிகளை போல் யாருக்கும் தீட்சை கொடுக்கவில்லை.  யாரிடமும் தீட்சை வாங்கவில்லை.


5)  தன்னிடம் சில கஷ்டங்களை சொன்னவர்களுக்கு அந்தக் கஷ்டத்தை நிவர்த்தி செய்வதற்கு ஜீவகாருண்யத்தையும், தீப வழிபாட்டையும் வலியுறுத்தி அவர்களது கஷ்டத்தை போக்கினார்.  சமயவாதிகளை போல நீ அந்த சேத்திரத்துக்கு போனால் அது சரியாகிவிடும், இந்தக் கோயிலுக்கு போனால் இது சரியாகிவிடும், இந்தத் தீர்த்தத்தில் நீராடினால் பாவம் போய்விடும், அந்த தீர்த்தத்தில் நீராடினால் புண்ணியம் பெருகும் என்றெல்லாம் சமயவாதிகளை போல அவர் பிரசங்கம் செய்யவில்லை.


6)  ஆன்ம லாபத்திற்கு வழிகாட்டினாரே தவிர,  சமயவாதிகளை போல ஆதாய லாபத்திற்கு அவர் வழிகாட்டவில்லை.


7)  தான் இறைவனுடன் ஐக்கியமாவதற்கு முன் ஒன்றரை வருடமாக கடவுள் ஒருவரே என்றும் அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்றும் பிரசங்கம் செய்து வந்தார்.  ஆன்ம லாபம் பெறுவதற்கு எந்த சமய கடவுளையோ  அல்லது  எந்த ஷேத்திரத்தையோ சுட்டிக்காட்டி அதனைப் பின்பற்ற சொல்லவில்லை.  அதுமட்டுமல்லாமல் எந்த சமயத்தையும் அவர் ஆதரிக்கவில்லை.


 இது போல் இன்னும் பல ஆதாரங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.  அது விரிக்கில் பெருகும்.  எனவே வள்ளலார் கூறியது போல் நாம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு,  அந்த எல்லாம் வல்ல இறைவனை பற்றி கொள்வோம்.


 தில்லை திருமாவளவன்.

Saturday, 16 December 2023

சன்மார்க்கம்-2

சன்மார்க்கத்தை வழி நடத்துவதற்கு அடிப்படையாக இருப்பது தயவு.  தயவை எப்படி விருத்தி செய்து கொள்ள முடியும்?  நம்மிடம்  நிறைய பணம் இருக்க வேண்டுமா?  பல பேரை நாடி சென்று பணத்தை வசூல் செய்து தயவு பெற்றுக்கொள்ள வேண்டுமா?  நம்மிடம் இருக்கும் பணத்தை எல்லாம் வாரி கொடுத்துவிட்டு ஓட்டாண்டியாக வேண்டுமா?  இதனாலெல்லாம் தயவு விருத்தி செய்து கொள்ள முடியாது.  பிறகு எப்படி தயவை விருத்தி செய்து கொள்வது?  தயவு விருத்தி செய்து கொள்ள நம்முடைய பாக்கெட்டில் இருந்து அதாவது பணத்திலிருந்து ஆரம்பிக்கக் கூடாது.  மனதில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.  மனதளவில் இறக்க சுபாவமும்,  எளியோர் படும் வேதனையைக் கண்டு  மனம் பதற்றம் அடைய வேண்டும்.  ஏழை எளிய மக்களை இறைவா நீ காப்பாற்று, என்று விண்ணப்பம் செய்ய வேண்டும்.  அப்படிச் செய்தால் தயவு விருத்தி ஆகும். நாம் இப்படி செய்வது சிறிய விளக்கு.  இந்த சிறிய விளக்கை கொண்டு, ஆண்டவனின் தயவாகிய பெரிய விளக்கை ஏற்ற வேண்டும்.  அதாவது ஆண்டவனின் அருள் விளக்கை ஏற்ற வேண்டும்.  இப்படி செய்து கொண்டிருந்தால் நம்முடைய ஆன்மா நெகிழ்ச்சி அடைந்து நல்ல பக்குவ நிலைக்கு வரும்.  அதன்பிறகு ஆண்டவரோடு இணைவதற்கான பக்குவம் நமது உடலில் ஏற்படும்.  இதைத்தான் வள்ளலார் ஆன்ம லாபம் என்று சொல்கின்றார்.  நமது குடும்ப வருமானத்தை சிக்கனம் செய்து ஜீவகாருண்யம் செய்ய வேண்டும் என்று வள்ளலார் கூறுகின்றார்.  தான் பட்டினி கிடந்து அடுத்தவருடைய பசியை போக்குவது ஜீவகாருண்யம் ஆகாது என்றும் வள்ளலார் கூறியிருக்கின்றார்.  இவற்றையெல்லாம் உணர்ந்து உண்மையான ஜீவகாருண்யம் செய்வோம்.  ஆண்டவரது அருளைப் பெறுவோம்.
 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க.
x

Friday, 15 December 2023

சன்மார்க்கம்-1

 இந்த உலக மக்கள் அனைவரையும் சன்மார்க்க சங்கத்திற்கு அடை வைத்திட திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் தோன்றினார்.  அதே முயற்சியில் நாம் இருந்தால்தான் நாமும் வள்ளலாருக்கு உறவினராகவும் தொண்டர்களாகவும் இருக்க முடியும்.  ஆனால் நம்மில் பலர் சன்மார்க்கத்தை பரப்புகின்றேன் இன்று சொல்லிக்கொண்டு செல்கின்ற இடத்தில் எல்லாம் சமய நெறிகளையும், வேறு பல மார்க்கங்களையும் ஆதரித்து பேசிவிட்டு வருகிறார்கள்.  அதற்கு காரணம் பணம்.  பணவசூலில் ஈடுபட்டிருக்கும் சன்மார்க்கிகள், இடத்திற்கு தகுந்தவாறு பேசினால் தான் நமக்கு நல்ல சன்மானம் கிடைக்கும் என்று எதை எதையோ பேசி உளறி விட்டு வருகிறார்கள்.  சன்மார்க்கத்தை சன்மானத்தில் அடகு வைத்து விடுகிறார்கள்.  வள்ளலார் ஆரம்ப காலத்தில் சமயத்தில் இருந்தது போல் தோன்றும்.  ஆனால் ஒரு நாளும் அவர் சமயத்தை ஆதரிக்கவில்லை.  கொலை, புலை ஆகியவை இந்த உலகத்திலே ஒரு சமயத்தில் ( பேர் மட்டும் சைவ சமயம் ) அதிகமாக இருந்தது.  அவர்களை திருத்தி நல்வழிப்படுத்துவதற்காகவே அவர் சமயத்தில் இருப்பது போல் தோற்றத்தை காட்டினார்.  இந்த சமயத்தையும் வள்ளலார் ஆதரிக்கவில்லை என்பதற்கு அவர் எழுதிய திருவருட்பாவிலே நிறைய சான்றுகள் உள்ளன.  அரை நிமிடத்தில் ஆயிரம் பணக்காரர்களை என்னால் அது அதிட்டிக்க (உருவாக்க ) முடியும் என்று வள்ளலார் கூறுகின்றார். அப்படி இருக்கும் பொழுது அவர் மேல் நம்பிக்கை வைக்காமல் பணத்தில் மேல் மட்டும் நம்பிக்கை வைத்து சன்மார்க்கிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.  அவரிடம் கேட்டால் கேட்டதை விட அதிகம் கொடுப்பார், என்பதை யாரும் உணரவில்லை.

 எல்லாம் செயல் கூடும். என் ஆணை. அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து.

 தில்லை திருமாவளவன்
9840348094

Sunday, 18 July 2021

தில்லை திருமாவின் சன்மார்க்க கட்டுரை 17

நல்ல மருந்திம் மருந்து 





 நல்ல மருந்திம் மருந்து.  ஆம்.  இம் என்பதுதான் மருந்து.   

 உடல்நிலை மோசமடைந்த ஒரு நோயாளியை நன்கு கவனித்தால் அவருடைய தொண்டையிலிருந்து ஒரு சப்தம் வருவதை கவனிக்கலாம்.  அது இம் இம் என்று முனகுவது ஆக இருக்கும்.  அவருடைய உடம்பு இயற்கையாக மருந்தைத் தேடி அவ்வாறு முனக செய்கிறது.  உடம்பு நன்றாக இருக்கும் பொழுதே இந்த மந்திரத்தை அவ்வப்பொழுது உச்சரித்து வந்திருந்தால்  அவருடைய உடல்நிலை மோசமடைந்து இருக்காது.  வரும் முன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும் என்பது திருவள்ளுவர் வாக்கு.   குறிப்பாக ம் என்று முடியக்கூடிய வார்த்தைகள் எல்லாம் ஒரு மருந்தாகவே இருக்கும்.

 வேலை சொன்ன வழியில் இரண்டு வார்த்தைகள் ம் என்று முடிகிறது.  ஒன்று எல்லாம்.  மற்றொன்று இருக்கும்.  பல்லாயிரக்கணக்கான மந்திர வார்த்தைகளை வள்ளலார் திருவருட்பாவில் கையாண்டுள்ளார்.  அவற்றில் சில,
 அருட்சிவ பதியாம், ஈனம் இன்று, உரை மனம், ஓங்கும், ஊக்கமும், உணர்ச்சியும், ஒளிதரும், ஆக்கையும், ஆக்கமும், பிறப்பெனும், ஐயமும், திரிபும், இவை விரிக்கின் பெருகும்.

 நல்ல மருந்து மருந்து சுகம் நல்கும் வைத்திய நாத மருந்து.  இந்த மருந்தை நாதமாக குறிப்பிடுகின்றார்.  நாதம் என்பது சப்தம் என பொருள்படும்.  உடலை நிச்சய உடலாக மாற்றுவதற்கு மூன்று முக்கியமான விஷயங்கள் உள்ளன.  அவை மணி மந்திரம் அவுஷதம்.  இவை மூன்றுமே மருந்துகள் தான்.  முதலாவதாக உள்ள மணி என்பது மிகவும் உயர்ந்த நிலையில் உள்ள மகான்களால் உங்களுடைய உடலில் உற்பத்தி செய்து கொள்ளக்கூடிய விஷயம்.  இதற்கு மிக உயர்ந்த ஒழுக்க நெறியில் நின்றால் உனது உடலில் இருக்கக்கூடிய விந்தானது மணியாக மாறிவிடும்.   அடுத்ததாக மந்திரம்.   திரு தான் வள்ளலார் குறிப்பிட்டுள்ள நாத மருந்து.  மந்திரத்தை உச்சரிக்கும் போது சப்தம் உண்டாகும்.  இந்த மந்திரத்தை ஓத ஓத நமது உடலில் ஒரு உணர்வுநிலை vibration ஏற்பட்டு அது மருந்தாக செயல்பட ஆரம்பிக்கும்.  முதலில் நமது உடம்பில் ஏற்படக்கூடிய பிணிகளை இந்த மருந்தினால் நாம் எடுத்துக்கொள்ள முடியும்.  நாளடைவில் இந்த பயிற்சியை மேற்கொண்டு வந்தால் பிணியால் பாதிக்கப்பட்ட மற்ற மனிதர்களின் துன்பத்தையும் நம்மால் போக்க முடியும்.  அதுதான் முடிவான சன்மார்க்க சுகம்.

 உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறு எல்லாம் விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க சுத்தசன் மார்க்க சுகநிலை பெறுக உத்தமன் ஆகுக ஓங்குக என்கின்றார் வள்ளலார்.

 இன்றைக்கும் கைக்குழந்தைகளுக்கு ஏதாவது கண்டுபிடிக்கமுடியாத பிணி பயம் ஏற்பட்டால் அவற்றை நீக்குவதற்கு எல்லா மதத்தைச் சேர்ந்த தாய்மார்களும் குழந்தைகளை எடுத்துக்கொண்டு முகமதியர்களின் கோரி வாசலில் நிற்பார்கள்.  அங்கே அல்லாஹ் ஓதும் பெரியவர்கள் குழந்தைகளை தங்கள் வாயால் ஊதி மந்திரம் ஜெபிப்பார்கள்.  இந்த நேரத்தில் அந்தக் குழந்தைகளின் பிணி பயம் நீங்கிவிடும்.  இது நடைமுறை உண்மை.  இதுவும் ஒரு நாத மந்திரம்தான். 

 மேற்சொல்லப்பட்ட மணி மற்றும் மந்திரம் இவற்றை கையாள முடியாதவர்கள் அவ்ஷிதம் என்று சொல்லக்கூடிய மருந்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.  அதாவது மூலிகை மாத்திரை கஷாயம் லேகியம் போன்றவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 

 நல்ல மருந்து என்று சமயத்தில் இருந்த போது வள்ளலார் பாடினார்.  அவரே சமயத்தை விட்டு சுத்த சன்மார்க்கத்திற்கு வந்தபிறகு,
 ஞான மருந்திம் மருந்து சுகம் நல்கிய சிற்சபாநாத மருந்து.

 முதலில்நல்கும் என்று எதிர்காலத்தில்  சொன்னவர், பின்னர் நல்கிய என்று இறந்த காலத்தில் கூறுகின்றார்.  இரண்டிலும் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் இரண்டு மந்திரமும் நாத மந்திரம் தான்.

 வாழ்க வாழ்க நாதனே.

 


அருட்பெருஞ்ஜோதி


-- தில்லை திருமாவளவன்













Saturday, 17 July 2021

தில்லை திருமாவின் சன்மார்க்க கட்டுரை 16

16ம் பெற்ற பெருவாழ்வு 





 இது கட்டுரை எண்  பதினாறு.  பதினாறு என்பதை பற்றி பார்ப்பதற்கு முன் எண் என்றால் என்ன எழுத்து என்றால் என்ன என்பதைப் பற்றி சிறிய விளக்கத்தை பார்ப்போம்.  எண் என்பது கடவுள் எழுத்து என்பது மனித உடல்.  இது திருமந்திர முதல் பாடல் தொடங்கி அருட்பெருஞ்ஜோதி அகவல் வரை கூன்றி படித்தவர்களுக்கு மிக நன்கு விளங்கும்.  இதற்கான விளக்கத்தை நாம் முழுமையாக வேறு ஒரு கட்டுரையில் பார்ப்போம்.  தற்பொழுது 16க்கு வருவோம்.  சன்மார்க்கத்தில் 16ஆம் நிலையை நாம் அடைந்தால் பரிபூரண நிலையை அடைந்து விட்டதாக அர்த்தம்.  நமக்கு பதினாறு பேறுகள் தேவையில்லை.  நமக்கு தேவை 16ஆம் நிலை.  திருவருட்பாவில் வள்ளலார் இதனை பல பாடல்களில் வலியுறுத்தி உள்ளார்.  இப்பொழுது பதினாறாம் நிலையை பார்ப்பதற்கு முன் சந்திரனின் நிலையை, அதன் கலையை பற்றி  நாம் தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.

 சந்திரன் என்பது மதி.
 மதி என்பது அறிவு.
 அறிவு என்பது ஞானம்.
 பூரணச்சந்திரன் பூரண ஞானம்.

 ஞான மயமாய் விளங்கும் வெண்ணிலாவே
என்னை நான் அறிய சொல்லு கண்டாய் வெண்ணிலாவே  -- இதுவே வள்ளலார் பாட்டு.  சந்திரனை வைத்துத்தான் நாம் இந்த 16ஆவது நிலையைப் பற்றி அறிந்து தெரிந்து மேலே ஏற முடியும்.  சரி வரிசையாக பார்ப்போம்.
1) முதல் நிலை - அமாவாசை - சரியையில் சரியை -- ஞான சூனியம் -  இறைவனை சிலைவடிவில் பக்தியோடு வணங்கி பண்டாரமாய் திரிவது.
2) இரண்டாம் நிலை -- பிரதமை -- சரியையில் கிரியை
3) மூன்றாம் நிலை  -- துவிதியை -- சரியையில் யோகம்
4) நான்காம் நிலை -- திருதியை -- சரியையில் ஞானம்
5) ஐந்தாம் நிலை -- சதுர்த்தி -- கிரியையில் சரியை
6) ஆறாம் நிலை  -- பஞ்சமி -- கிரியையில் கிரியை
7) ஏழாம் நிலை -- சஷ்டி -- கிரியையில் யோகம்
8) எட்டாம் நிலை -- சப்தமி -- கிரியையில் ஞானம்
9) ஒன்பதாம் நிலை -- அஷ்டமி -- யோகத்தில் சரியை
10) பத்தாம் நிலை -- நவமி -- யோகத்தில் கிரியை
11) பதினொன்றாம் நிலை -- தசமி -- யோகத்தில் யோகம் 
12) பன்னிரெண்டாம் நிலை -- ஏகாதசி -- யோகத்தில் ஞானம் 
13) பதிமூன்றாம் நிலை -- துவாதசி -- ஞானத்தில் சரியை
14) பதினான்காம் நிலை -- திரையோதசி -- ஞானத்தில் கிரியை
15) பதினைந்தாம் நிலை -- சதுர்த்தசி -- ஞானத்தில் யோகம்
16) பதினாறாம் நிலை -- பவுர்ணமி -- ஞானத்தில் ஞானம்  --  பரிபூரண நிலை.

 இங்கே சிலர் குழம்புவதற்கு வாய்ப்பு உள்ளது.  0 = 1 என ஆரம்பித்தோம்.  15 = 16 என முடித்துள்ளோம்.  எனவே குழம்ப வேண்டாம்.  இது மனித உடலிலும், மனிதரின் மனதிலும், ஒரு சக்கரமாக சுழன்று கொண்டே இருக்கும்.   இப்படி ஏறி ஏறி இறங்கி சுழன்று கொண்டே இருக்காமல் ஞானத்தில் பரிபூரணம் ஆவதே சன்மார்க்கம் . 

 நன்னாலும் (4×4 =16)கடந்தே ஒளிர் ஞான சபாபதியே
 பொன்னாரும் சபையாய் அருள் பூரண புண்ணியனே
 என்னால் ஆவது ஒன்றும் உனக்கு இல்லை எனினும் என் தாய்
 உன்னால் வாழுகின்றேன் எனக்கு உண்மையை உரைத்து அருளே
-- இது வள்ளலார் பாட்டு.
 
 

 அருட்பெருஞ்ஜோதி வணக்கம்.

-- தில்லை திருமா வளவன் 

 கீழேயுள்ள போட்டோவில் மாத பூச   அட்டவணை உள்ளது.  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  அடுத்த பூசம்
 3/9/2021