https://youtu.be/y9nD4ucnkAw?si=p49PRWWbtmbjfzEn
- ஜோதி தரிசனம் அல்லது ஜோதி வழிபாடு(டிசம்பர் மாதம் 2025 ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு அரசின் சுத்த சன்மார்க்க மாநாட்டுக்காக நான் எழுதிய கட்டுரை. கட்டுரை வெளிவரவில்லை. எனவே பிளாக்கரில் வெளியிடுகிறேன். )
https://youtu.be/y9nD4ucnkAw?si=p49PRWWbtmbjfzEn
சன்மார்க்கத்தின் தற்போதைய நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
சன்மார்க்கத்தில் உள்ளவர்கள் 95% பேர் சங்கிகளாகவும் RSS மற்றும் BJP யை சார்ந்தவர்களாக உள்ளனர். இவர்கள் சமயத்தை சார்ந்தவர்களாக உள்ளனர்.
சமயத்தை விட்டால் தான் சன்மார்க்கத்திற்கே வரமுடியும் என்பது இவர்களுக்கு புரிவதில்லை.
அதுமட்டும் அல்லாமல் இந்து மதத்தை தவிர பிற மதங்களை தாக்கி பேசும் (புற சமய தூஷனை ) நபர்களாக உள்ளனர்.
வள்ளலார் 63 நாயன்மார்கள் + 12 ஆழ்வார்கள் + 20 மதங்கள் (கிருஸ்துவம், முகமதீயம் உட்பட ) + 1 கடவுள் நிலை = 96 தத்துவங்கள் என வள்ளலார் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பைபிளில் 7 நாட்களில் இறைவன் உலகை படைத்தான் என்று சொல்லப்படுவது குறித்து எமக்கு தெரியும் என்று சொல்லி அதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.
அனைத்து மதங்களையும் வள்ளலார் சமமாக தான் பார்த்தார். ஆனால் தற்போது உள்ள சன்மார்கிகள் என்று தங்களை தாங்களே குறிக்கொல்பவர்களுக்கு இது விளங்கவே இல்லை.
வெளிநாட்டில் உள்ள கிருத்துவர்களை இந்து மதத்திற்கு மாற்றி பட்டை அடித்து கொட்டை மாட்டி அசுத்த சன்மார்க்கத்திற்கு அழைத்து வருகிறார்கள்.
வள்ளலார் உலகர் அனைவரையும் சன்மார்க்கத்திற்கு அழைத்து வர பாடு பட்டார். இவர்கள் அனைவரையும் சமயத்திற்கு அழைத்து வர பாடுபடுகிறார்கள்.
அந்த அந்த மதத்தில் உள்ளவர்களை அப்படியே சன்மார்க்கத்திற்கு வரவழைப்பது தான் சன்மார்க்கம். அதை விடுத்து அவர்களை பட்டை அடிக்க வைத்து தான் சன்மார்க்கத்திற்கு கொண்டுவர வேண்டும் என்ற அவசியம் இல்லை. அப்படி இருந்தால் வள்ளலார் சொல்லி இருப்பாரே?
தற்போது உள்ள சன்மார்கிகள் பலரும் சாத்தன்களை போல வேலை செய்கிறார்கள்.
இவர்களிடம் மிகவும் எச்சரிக்கை தேவை.
சன்மார்க்கம் என்றால் ஒன்றும் இல்லாதது. வெட்ட வெளியாக இருப்பது. ஏதாவது ஒன்று இருக்கிறது என்று சொன்னால் அது சன்மார்க்கம் இல்லை. சரி வள்ளலார் சன்மார்க்கியா அல்லது சமயவாதியா? என்று கேட்டால் அவர் சன்மார்க்கி என்றுதான் சொல்ல வேண்டும். அவர் சமயவாதி இல்லை என்பதற்கு பல ஆதாரங்கள் இருக்கின்றன.
ஆதாரங்கள்
1) அவர் சமயவாதியை போல் தன்னை வெளிக்காட்டி கொள்ளவில்லை.
2) சமயவாதிகளை போல் அவர் காவி அணியவில்லை.
3) சமயவாதிகளை போல் வேஷம் கட்டிக் கொள்ளவில்லை.
4) சமயவாதிகளை போல் யாருக்கும் தீட்சை கொடுக்கவில்லை. யாரிடமும் தீட்சை வாங்கவில்லை.
5) தன்னிடம் சில கஷ்டங்களை சொன்னவர்களுக்கு அந்தக் கஷ்டத்தை நிவர்த்தி செய்வதற்கு ஜீவகாருண்யத்தையும், தீப வழிபாட்டையும் வலியுறுத்தி அவர்களது கஷ்டத்தை போக்கினார். சமயவாதிகளை போல நீ அந்த சேத்திரத்துக்கு போனால் அது சரியாகிவிடும், இந்தக் கோயிலுக்கு போனால் இது சரியாகிவிடும், இந்தத் தீர்த்தத்தில் நீராடினால் பாவம் போய்விடும், அந்த தீர்த்தத்தில் நீராடினால் புண்ணியம் பெருகும் என்றெல்லாம் சமயவாதிகளை போல அவர் பிரசங்கம் செய்யவில்லை.
6) ஆன்ம லாபத்திற்கு வழிகாட்டினாரே தவிர, சமயவாதிகளை போல ஆதாய லாபத்திற்கு அவர் வழிகாட்டவில்லை.
7) தான் இறைவனுடன் ஐக்கியமாவதற்கு முன் ஒன்றரை வருடமாக கடவுள் ஒருவரே என்றும் அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்றும் பிரசங்கம் செய்து வந்தார். ஆன்ம லாபம் பெறுவதற்கு எந்த சமய கடவுளையோ அல்லது எந்த ஷேத்திரத்தையோ சுட்டிக்காட்டி அதனைப் பின்பற்ற சொல்லவில்லை. அதுமட்டுமல்லாமல் எந்த சமயத்தையும் அவர் ஆதரிக்கவில்லை.
இது போல் இன்னும் பல ஆதாரங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். அது விரிக்கில் பெருகும். எனவே வள்ளலார் கூறியது போல் நாம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, அந்த எல்லாம் வல்ல இறைவனை பற்றி கொள்வோம்.
தில்லை திருமாவளவன்.