Showing posts with label thiruvarulpa. Show all posts
Showing posts with label thiruvarulpa. Show all posts

Thursday, 15 July 2021

தில்லை திருமாவின் சன்மார்க்க கட்டுரை 1

 எல்லாம் செயல் கூடும்

அனைவருக்கும் வணக்கம்.

இந்த தலைப்பை நாம் ஒவ்வொரு சன்மார்க்க கூட்டத்திலும் சொல்கின்றோம்.  ஆனால் இதன்படி நடந்து கொள்கிறோமா என்றால் இல்லை என்றே தோன்றுகின்றது.  நம்முடைய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராலும், வள்ளலாராலும் எல்லாம் முடியும்.  அதற்கு நாம் செய்யவேண்டியது இறைவனை ஏற்றி ( புகழ்ந்து )பாடுவதே.

 ஆனால் நாம் சமய மார்க்கத்தில் பழகிப் பழகி ஆண்டவரை எப்பொழுதும் குறைவாகவே மதிப்பு போட்டு வைத்திருக்கிறோம்.  அவருடைய ஆற்றல் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டதாகவே நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

 உதாரணமாக சமீபத்தில் ஒரு சன்மார்க்க சொற்பொழிவைக் கேட்டேன்.  அதில் வள்ளலார் தன்னுடைய சீடராக இருந்த கல்பட்டு ஐயாவுக்கு இருந்த நோயை நீக்காமல் அது தானாகவே நல்வினை செய்ய செய்ய மாறிவிடும் :  இல்லை என்றால் அந்த வினையை தீர்ப்பதற்கு மறுபடியும் ஒரு பிறவி எடுத்தாக வேண்டும், என்று தன் சீடரிடம் வள்ளலார் சொன்னதாக அந்த சொற்பொழிவில் கூறுகின்றார்.

 இது முழுக்க முழுக்க கற்பனை கலந்த பொய்யான கட்டுக் கதை.   கல்பட்டு ஐயா வுக்கு நோய் இருந்ததற்கான சான்று ஆதாரம் இருக்கிறதா?  அப்படியே இருந்தாலும் அதை நீக்குவதற்கு வள்ளலாரால் முடியாதா??  வினையை வைத்து வள்ளலார் பேரம் பேசுவாரா??? 

 முதலில் சன்மார்க்கிகள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.  சன்மார்க்கத்தில் வினை  என்ற பாடமே கிடையாது.   நல்வினை தீவினை ஆகியவை சன்மார்க்கிகளை தாக்காது. 

 ஊழையும் உட்பக்கம் காண்பர் -  திருவள்ளுவர்.

 முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள்
 பின்னை வினையை பிடித்து பிசைவர்கள் -- திருமூலர்

 செய்தாலும் தீமையெல்லாம் பொருத்தருள்வான் பொதுவில் -- வள்ளலார் 

 கல்பட்டு ஐயாவின் உடைய உடல் நலமாக இருக்க வேண்டும் என்றுதான் வள்ளலார் நினைப்பார்.  அதை நீக்காமல் விட்டுவிடுவதற்கு காரணங்களைச் சொல்லிக் கொண்டிருக்க மாட்டார்.  வள்ளலார் சர்வ தயாபரன்.  அவரை ஏதோ சாதாரண ஒரு சாமியார் போல சித்தரித்தல் கூடாது.  நீங்கள் கற்பனை கதைகளை செய்யுங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை.  அதில் நேர்மறை எண்ணங்கள் இருத்தல் வேண்டும்.  இது போன்ற எதிர்மறை எண்ணங்கள் இருத்தல் கூடாது.  சன்மார்க்கத்தில் அணு அளவு கூட எதிர்மறை எண்ணம் என்பதே கிடையாது.

 இறைவனின் உண்மையான சொரூப ரூப சுபாவங்களை சிந்தித்துக் கொண்டும் சத்விசாரம் செய்து கொண்டும் இருந்தால், ஒரு கண  நேரத்தில் முத்தேக சித்திகளையும் ஒருவனால் பெற முடியும் என்று வள்ளலார் சொல்கின்றார்.

 எல்லாம் செயல்கூடும் என்னாணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து.

--  தில்லை திருமாவளவன்


தில்லை  திருமாவின் சன்மார்க்க கட்டுரை 3

 சிந்தனை செய் மனமே

ஆண்டவனைப் பற்றி சிந்தனை செய்வது எப்படி என்பதைப் பற்றிய ஒரு சத் விசாரணை இன்று நாம் பார்ப்போம்.  பற்றுக பற்றற்றான் பற்றினை என்று வள்ளுவரும் வள்ளலாரும் கூறி இருக்கிறார்கள்.  இறைவனுடைய சிந்தனையை நாம் மேற்கொள்ளுவது ஒரு மருந்து உட்கொள்வதற்கு சமமாகும்.  நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டு இருக்கும் ஒரு நபர் சித்தமருத்துவம் மேற்கொள்ளும் பொழுது முதலில் வயிற்றை காலி செய்ய அவருக்கு மருந்து கொடுக்கப்படும்.  அதுபோல நீண்ட நாட்களாக இந்த உலகியல் என்ற நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் நாம் இறை சிந்தனை செய்வதற்குமுன் நமது மனதை தூய்மை படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.  இதற்கு முதல் சாதனமாக இருப்பது இறைவனாலேயே எடுத்துக்கொள்ளப்பட்ட மகா மந்திரமாகிய அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்பதுதான்.

 மேலும் நமது மனதை சுத்தி செய்து கொள்வதற்கு ஒரு சிறுகதையின் மூலமாக விளக்குகின்றேன்.  ஒருவர் ஒரு அண்டாவில் காரக்குழம்பும் மற்றொரு அண்டாவில் பழ ரசமும் வைத்திருந்தார்.  அவர் மூன்று நபர்களை அழைத்து அவர்களிடம் ஆளுக்கு ஒரு சிறு பாத்திரத்தை கொடுத்தார்.  அந்தப் பாத்திரத்தில் நீங்கள் எதைவேண்டுமானாலும் நிரப்பி எடுத்துச் செல்லுங்கள் என்று அவர்களிடம் கூறினார்.   ஒருவன் தனது பாத்திரத்தில் காரக்குழம்பை நிரப்பி எடுத்துச் சென்றான்.  மற்றொருவன் தனது பாத்திரத்தில் பழரசத்தை நிரப்பி எடுத்துச் சென்றான்.  மூன்றாவதாக வந்தவன் தனது பாத்திரத்தில் எதையுமே நிரப்பிக்கொள்ளாமல் அப்படியே எடுத்துச் சென்று விட்டான்.
1) காரக்குழம்பை நிரப்பிக் கொண்டவன் பாவி.  அவன் பலவித துஷ்ட செயல்களை செய்பவன்.
2)   பழரசத்தை நிரப்பிக் கொண்டவன் அப்பாவி. நல்லவன்.  இவன் கெட்டது எங்கு நடந்தாலும் தட்டிக் கேட்பான்.  நல்லதே நடப்பதற்காக போராடுவான்.
3) எதையுமே நிரப்பிக் கொள்ளாமல் காலியாக வைத்திருந்தவன் ஞானி.  இவனுடைய பாத்திரத்தில் வெட்டவெளி இருந்தது.  தூய ஒளியும் இருந்தது.

 இந்த மூன்றாவது மனிதனை போல்  நாம் இருந்தால்தான் இறை சிந்தனையில் ஈடுபட முடியும்.  நமது மனதை காலியாக வைத்துக் கொண்டிருந்தால் தான் அதில் இறைவன் என்கின்ற ஒளியையும் வெளியையும் நாம் காணமுடியும்.

 இந்த நிலையில் செய்யும் இறைவழிபாடு தவம் ஆக இருக்கும்.

 அதனால் தான்,

 சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் என்று மாணிக்கவாசக சித்தர் பாடுகிறார்.

 அந்தி வண்ணா அரனே சிவனே என்று சிந்தைசெய் வண்ணந் திருந்தடி யார்தொழ என்று திருமூல சித்தர் பாடுகிறார்.

 சித்தி எலாம் எனக்களித்த சிவகதியை உலகீர் சிந்தைசெய்து வாழ்த்துமினோ நிந்தையெல்லாம் தவிர்ந்தே என்று ஞானசித்தர் வள்ளலார் பாடுகின்றார்.

 இதுபோல் நிறைய உதாரணங்கள் காட்ட முடியும்.  இந்த நிலையை ஒருவர் பெற்றால்தான் சும்மா இருக்கும் சுகம் கிட்டும். 

 அருட்பெருஞ்ஜோதி வணக்கம்.

 தில்லை திருமாவின் சன்மார்க்க கட்டுரை 4

 காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்

இறைவன் மீது சதாசர்வகாலமும் அன்பு செலுத்தவேண்டும். அவனை காதலித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

 அன்பே சிவம் என்று திருமூல சித்தர்  கூறுகின்றார்.

 ஒரு இளைஞன் ஒரு பெண்ணை காதலிக்கும் பொழுது, அவளுடைய முகம் அவன் மனதை விட்டு விலகுவதே இல்லை. அவன் சரியாக  தூங்குவதே இல்லை.   வேளாவேளைக்கு சரியாக சாப்பிட மாட்டான்.  யாரைப் பார்த்தாலும் அவனுக்கு அவன் காதலியை பார்ப்பது போலவே தெரியும்.  யார் அவனிடம் பேசினாலும் அவனுடைய காதலி பேசுவது போலவே அவனுக்கு தோன்றும்.  இந்த நிலையில்தான் நாமும் இறைவனை காதலிக்க வேண்டும்.

 இறைவனை நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அழுத கண்ணீர் மாறுமா ஆதாரத்தில் தான் இச்சை  செல்லுமா  என்றும்,

 அன்புருவாம் பரசிவமே என்றும் ஞான சித்தர் வள்ளலார் கூறியுள்ளார்.

 நிறைய பேர் அன்பு காதல் என்பது சரியை நிலை எனவே அது சன்மார்க்கத்தில் தேவையில்லை என்று கூறுவார்கள்.  அதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.  இறைவனை காதலிப்பதில் நான்கு வகை உண்டு.

1) சரியை காதல் - இறைவனை சிலா ரூபமாக கருதி காதலிப்பது.
2) கிரியை காதல் - இறைவன் எல்லா அன்பர்களின் மனதில் இருப்பதால் அவர்களுக்கு ஜீவகாருண்யம் செய்து இறைவனை காதலிப்பது.
3) யோக காதல் - இறைவன் அக்னியாக நமது உடலில் காரிய படுகின்றான் என உணர்ந்து அவனை காதலிப்பது.
4) ஞான காதல் - அங்கிங்கெனாதபடி இறைவன் எங்கும் இருக்கின்றான் என்றும், அது இது என உரைபரிதாய் இறைவன் எங்குமாய் விளங்குவதாக எண்ணி காதலிப்பது.

 இதுபோல் அவர்கள் அவர்கள் நிலையில் இருந்து இறைவனை காதலிக்க வேண்டும்.

 நமச்சிவாய என்ற ரகசிய வார்த்தையை விளக்க வந்த திருஞானசம்பந்த சித்தர், காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது என்று விளக்குகின்றார்.

 இறைவனை காதலித்துதான் நான் மென்மையான நிலையை அடைந்தேன் என்பதை ஒப்புதல் வாக்குமூலமாக கொடுத்தவர் திருமூல சித்தர்.
 மண்ணகத் தான்ஒக்கும் வானகத் தான்ஒக்கும்
 விண்ணகத் தான்ஒக்கும் வேதகத்தான் ஒக்கும்
 பண்ணகத்தின்னிசை பாடல் உற்றானுக்கே
 கண்ணகத் தேநின்று காதலித் தேனே

 நமது ஞானசித்தர் வள்ளல்பெருமான் இறைவன் மீது நமது ஆசையை தூண்டி அழைக்கின்றார்.
 அளித்திடு சிற்றம்பலத்து என் அப்பன் அருள் பெறவே
 ஆசைஉண்டேல் வம்மின் இங்கே நேச முடையீரே
 ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
 அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்

 இறைவனை காதலிப்போம் இகபர இன்பத்தை முழுமையாக அடைவோம். அருட்பெருஞ்ஜோதி.

 கட்டுரை 5

 அண்ட பிண்ட விசாரம்

திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் நமக்கு இட்ட கடைசி கட்டளைகளில் ஒன்று அண்ட பிண்ட விசாரம் செய்வது. அண்ட பிண்ட விசாரம் செய்வதற்கு முதலில் நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் இந்த அண்டத்தில் உள்ளதெல்லாம் இந்த பிண்டத்திலும் இருக்கின்றது என்பதுதான்.  இந்த ஒரு சின்ன விஷயத்திலேயே வள்ளலார் நமக்கு எல்லாவற்றையும் சொல்லிவிட்டார்.  ஆம்.  இந்த அண்டத்தில் உள்ள இறைவனும் நமது பிண்டத்தில் ( உடம்பில் ) உள்ளான். நமது உடம்பானது பிண்டம்.  இந்த உடம்பை விட்டு வியாபகமாய் உள்ளது அண்டம்.  நமது உள்ளங்காலில் இருந்து உச்சந்தலை வரைக்கும் உள்ள பாகங்கள் ஒவ்வொன்றும் 96 தத்துவங்கள் ஆகும்.  இது நமது ஒவ்வொருவரின் ஆட்காட்டி விரல் அளவில் உள்ள 96 அங்குலங்கள் ஆக இருக்கும்.

 எங்குலம் எம்மினம் என்ப தொண்ணூற்றாறு அங்குலம் என்றருள் அருட்பெருஞ் ஜோதி

 நமக்கு கொடுக்கப்பட்ட இந்த இந்த உடம்பு தான் நமக்கு குலமும் இனமும் ஆக இருக்கும்.  இதை விட்டு வெளியிலே நமது குலத்தையும் நமது இனத்தையும் தேடுவது அறியாமை. 

 இந்த அண்டத்தில் உள்ள காற்று, ஆகாயம், அக்கினி, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் இறைவன் இவை யாவுமே நம் உடலில் இருக்கின்றது.  இவை எங்கே இருக்கின்றது எப்படி இருக்கின்றது என்று உடலில் பொருத்திப் பார்த்து பழக வேண்டும்.  இதுவே அண்ட பிண்ட விசாரம்.  இந்த விசாரணையை நம்முடைய அறிவுக்கு தக்க மனிதர்கள் உடனேயோ அல்லது தனியாகவோ செய்ய வேண்டும்.

 சமய மார்க்கத்தில் வைஷ்ணவ சம்பிரதாயத்தில் கண்ணனுடைய லீலைகளை சொல்லும்போது கண்ணன் சிறுவயதில் மண்ணை தின்றதாகவும் அவனுடைய தாய் அவனை அதட்டி, வாயை திற என்று கூறும் பொழுது அந்த வாய்க்குள்ளே உலகம் முழுவதும் தெரிந்ததாகவும் அந்த உலகத்தில் இந்த தாயும் அந்த கண்ணனும் அங்கே இருந்ததாகவும் கூறுவர். இப்படியாக வாய்க்குள்ளே உலகமும் உலகத்துக்கு உள்ளே கண்ணனும் அந்தக் கண்ணனின் வாய்க்குள்ளே உலகமும் என்று முடிவில்லாமல் சென்று கொண்டே இருக்கும். இதைத்தான் வள்ளலார்,


 உயிருள் யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே உயர்நலம் பரவுக என்று உரைத்த மெய்ச் சிவமே

 மேலும்,

 ஜோதியுள் ஜோதியுள் ஜோதி என்றும் கூறியுள்ளார்.

 இவ்வாறு நாம் விசாரம் செய்து கொண்டே வந்தால் நம்முடைய உடலின் அருமை நமக்கு புரியவரும்.  இந்த உடலானது விலை மதிப்பில்லாத பொக்கிஷம்.  அதனால் தான் உடலை பொன்போல் பாதுகாக்க வேண்டும் என்று வள்ளலார் அடிக்கடி கூறுவார்.  மேலும் இது தொடர்பான விரிவான விளக்கங்களை பின்னர் பார்ப்போம்.

 கட்டுரை 6

திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் உரைநடையில் 96 தத்துவங்களை விளக்கும் பொழுது கீழ்கண்டவாறு நமக்கு தெரிவிக்கின்றார்.

 நாயன்மார்கள்      63
 ஆழ்வார்கள்           12
 சமயங்கள்              20
 சிவம்                          1

 ஆக மொத்தம்       96.

 மேற்சொன்ன 20 சமயங்களில் சைவம் வைணவம் சமணம் பௌத்தம் கிறிஸ்தவம் மகமதியம்  உட்பட்டது என கூறுகின்றார்.

 மேலும் ஓரிடத்தில் கிறிஸ்தவ வேதாகமத்தில் ஒரு விஷயத்தை எடுத்துக் கூறி இது பற்றி எமக்கு தெரியும் என்று கூறுவதோடு மட்டுமல்லாமல் இந்த அனைத்து சமயங்களின் தத்துவ விவகாரங்களை குழுமத்தால் அறிக என்று குறிப்பிட்டுள்ளார்.

 வள்ளலார் நமது தலை உச்சியில் ஒரு சத்து இருப்பதாகவும் அதைக் காத்துக் கொள்வதற்காக உச்சந்தலையை எப்பொழுதும் மூடி இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.  முகமதிய சமயத்தில் ஆண்கள் பெண்கள் அனைவரும் உச்சந்தலையை மூடி முக்காடிட்டு இருப்பது அனைவரும் அறிந்ததே.

 முகமதியர்களின் கடவுள் அல்லா என்பது.   கிறிஸ்தவத்தில் ஏசுநாதருக்கு முன்னே சொன்ன பெயர் எலியா என்ற தீர்க்கதரிசி ஆவார்.  வள்ளலார் எல்லாம் செயல் கூடும் என்று எல்லாம் என்ற வார்த்தையை அடிக்கடி கூறுவார்.  அல்லா, எல்லா(ம்), எலியா இவைகளெல்லாம் ஒரு மந்திரச் சொற்கள்.

 தமிழ்நாட்டில் முகமதிய மதத்தைச் சேர்ந்த ஞானிகள் பலர் இருந்தனர்.  அவர்கள் குறிப்பிடத்தக்க சொல்ல வேண்டியவர்கள் தக்கலை பெரியப்பா, பீர் முகமது,  குணங்குடி மஸ்தான் சாயபு ஆகியவர்கள்.  இதில் குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்கள் ராமநாதபுரம் தொண்டி என்ற ஊரில் வசித்து வந்தவர்.  அவர் அங்கே இருந்து சென்னையில் ஒரு பகுதியில் வந்து தங்கி இருந்தார்.   டெல்லியில் இருந்து அவர் வந்து இங்கேயே தங்கி இருந்த இடத்திற்கு பெயர் தொண்டையார்பேட்டை என்று அவர் பெயராலேயே வழங்கியது.  இப்பொழுது தண்டையார்பேட்டை என்று பெயர் மாரி அங்கேயே அவருடைய சமாதியும் உள்ளது.

 ஒரு முஸ்லிம் ஞானி கூறுகிறார்

 பாயாத கொம்பு இரண்டும்  பரிவுடன் இணக்கமானால் ஆயாவும் அவனே ஆவான் அல்லாவும் அவனே ஆவான்.

 முகமதிய மதத்தாலும் சன்மார்க்க த்தாலும் சொல்லப்பட்ட இறைவனைப் பற்றிய முக்கியமான கருத்து என்னவென்றால்  இறைவன் ஈடு இணை அற்றவன்:  இறைவன் ஒப்புமை சொல்ல முடியாதவன் என்பதே.

 கட்டுரை 8

வள்ளலார் இரக்கமே எனது உயிர்.  இரக்கம் என்னிடமிருந்து போய்விட்டால் எனது உயிரும் என்னிடமிருந்து போய்விடும் என்று வள்ளலார் கூறுகின்றார்.

எறும்பு முதல் யானை வரை எல்லா உயிர்களிடத்தும் இறைவன் இருப்பதாக பாவித்து வரும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வள்ளலார் கூறுகின்றாரர்.

எல்லோரும் இன்புற்று இருக்க
நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும்
அறியேன் பராபரமே   -- தாயுமானவர் 

இந்திரிய ஒழுக்கம் ஜீவ ஒழுக்கம் ஆகிய இரண்டு ஒழுக்கங்களை வெற்றிகரமாக கடந்தால் தான் இந்த நிலையை அடைய முடியும்.

 இரக்கமாக இருக்கிறேன் என்பதற்காக நம்மிடமுள்ள பணத்தை எல்லாம் கொடுத்து விட்டு நாம் சும்மா இருக்க வேண்டும் கஷ்டப்பட வேண்டும் என்பது அர்த்தம் அல்ல,  இதனுடைய பொருள் சக்திக்கு முடிந்த அளவு சிக்கனமாக இருந்து ஜீவகாருண்யம் செய்ய வேண்டும் என்று வள்ளலார் கூறுகின்றார்.

 மனதளவில் இரக்கத்தோடும் உருக்கத்தோடும்  இருந்தாலே பெரிய விஷயம்.

 இரக்கம் என்பது ஒரு பள்ளம் போன்றது.   பள்ளத்தை நோக்கித்தான் நீர் பாயும்.  அதுபோல இரக்கமுள்ள மனத்தை நோக்கித்தான் இறைவன் அருள்மழை பாயும்.

நாம் உயிர்களிடத்து இரக்கம் காட்டினால் தான் இறைவன் நம்மிடத்தில் இரக்கம் காட்டுவான்.  இறைவன் கருணையே வடிவானவன்.  மனிதனும் அந்த கருணை வடிவமாக மாறும்போது அவன் கடவுள் வடிவமாக மாறுகின்றான்.

அதனால்தான் ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்று கூறுகின்றார்.  மேலும் அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு எல்லாம் ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்று கூறுகின்றார்.     மற்ற வழியில் கடவுள் வழிபாடு செய்பவர்களுக்கு அறிவு விளக்கம் இல்லை என்பது இதன் பொருள்.

எத்துணையும் பேதமிலாது எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணி உள்ளே ஒத்து உரிமை உடையவராய் உவக்கின்றார் யார்? என வள்ளலார் கேட்கின்றார்.

தீது நினைக்கும் பாவிகட்கும் செய்தாய் கருணை   என்றும்

கல்லுங் கனியத் திருநோக்கம் புரியும் கருணைக் கடலே   என்றும்  இறைவனைப் பார்த்து வள்ளலார் பாடுகின்றார்.

 இரக்கமாக இருப்போம் இரக்கத்தை பெறுவோம்.  இதுதான் சிறு நெருப்பை கொண்டு பெரிய தீபத்தை ஏற்றுவது போலாகும். 

Sunday, 16 December 2018

எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம்


வள்ளலார் எழுதிய திருவருட்பா

பாடியவர் : திருமாவளவன்

பக்கவாத்தியம் : இராஜாராமன் ஐயர்

https://youtu.be/C60t3W7yTUw


 கட்டுரை 8
 வள்ளலாரும் மாணிக்கவாசகரும்

வள்ளலார் மாணிக்கவாசகர் மேல் மிகுந்த அன்பு பாராட்டியவர்.  ஏனென்றால் மாணிக்கவாசகர் சரியை கிரியை யோகம் ஞானம் இதில் ஞானத்தை வலியுறுத்தியவர் மாணிக்கவாசகர். 

 சரியை  -- தாச மார்க்கம்   --  அப்பர்
 கிரியை  - சற்புத்திர மார்க்கம்  - சம்பந்தர்
 யோகம்  - சகமார்க்கம் - சுந்தரர்
 ஞானம்  - சன்மார்க்கம்  - மணிவாசகர்

 சன்மார்க்கம் என்பது இறைவனை மனைவியாகவோ அல்லது கணவராகவோ நினைத்து வழிபடுவது.  கணவன் மனைவி உறவு என்பது இருவரும் ஐக்கியமாகி ஒரே நிலையில் நிற்பது.  ஆண்டானும் அடிமையும் தனித்தனியாக நிற்பார்கள்.  அப்பாவும் பிள்ளையும் தனித்தனியாக நிற்பார்கள்.  நண்பர்கள் தனித்தனியாக நிற்பார்கள்.  ஆனால் கணவன்-மனைவி ஒன்றாக இணைந்து இருப்பார்கள்.  இதுதான் சன்மார்க்கம்.

 மாணிக்கவாசகரும் வள்ளலாரைப் போலவே ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை யாம்பாடக் கேட்டேயும் என்று கூறுகிறார்.

 யானே பொய் என் நெஞ்சும்
 பொய் என் அன்பும் பொய்
 ஆனால் வினையேன் அழுதால்
 உன்னைப் பெறலாமே
 தேனே அமுதே கரும்பின்
 தெளிவே தித்திக்கும்
 மானே அருளாய் அடியேன்
 உனை வந்து உறுமாரே

 இதைப் படித்தால் இது திருவாசகமா அல்லது திருவருட்பாவா என்ற ஐயம் நமக்குள்ளே ஏற்படும்.

 வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய் கோனாகி யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டு வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே

 இப்படியெல்லாம் இறைவனை புகழ்ந்த மாணிக்கவாசகரை கீழ் கண்டவாறு வள்ளலார் புகழ்ந்து பாடுகின்றார்.

 வான் கலந்த மாணிக்க வாசக நின் வாசகத்தை
 நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
 தேன் கலந்து பால் கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்து என்
ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே

 மாணிக்கவாசகரின் தத்துவத்தை நாம் மருவி பாடுவோம் நல்ல கதி அடைவோம்.


 வள்ளலாரும் சன்மார்க்கமும்

 கட்டுரை 9



 திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் சமரச சுத்த சத்திய சன்மார்க்க சங்கம் என்று ஒரு சங்கத்தை நிறுவி நடத்தி வருகின்றார்.  நானே சன்மார்க்கத்தை நடுவிலிருந்து நடத்துகின்றேன் என்று உறுதி அளித்துள்ளார்.  சரி வள்ளலாரே சன்மார்க்கத்தை நடத்துகின்றார் என்று கூறிவிட்டு நாம் எல்லாம் சோம்பலாக இருக்கக்கூடாது.  ஒவ்வொரு நாளும் நம்மால் இயன்ற அளவு சன்மார்க்கம் சார்ந்த செயல்கள் ஏதாவது ஒன்றை செய்து கொண்டே இருக்க வேண்டும்.  இந்த உலகத்திலே இரக்கத்தோடு இருக்கும் எவரும் சன்மார்க்கம் சார்ந்தவரே என்று வள்ளல் பெருமான் கூறியுள்ளார்.  ஒருவர் எந்த ஜாதியை சேர்ந்தவராக இருந்தாலும் மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் தேசத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர் இரக்க குணம் என்று ஒன்று மட்டும் இருந்துவிட்டால் போதும் சன்மார்க்கம் சார்ந்தவராக இருப்பார்.  இதில் ஐயமில்லை.  சன்மார்க்கம் என்பது ஏதோ ஒரு சமயத்துக்கு மட்டும் சார்ந்தது என்று சிலர் கூறிக் கொண்டிருக்கின்றார்கள் அது முழுக்க முழுக்க தவறான கருத்து. 

 ஒருவர் ஒரு நாளைக்கு ஏதோ ஒரு ஏழைக்கு உதவி செய்கின்றார் என்றால் நல்லது.  ஒருவர் ஒருநாளைக்கு உலகத்தில் உள்ள ஏழைகள் எல்லாம் நலம் பெற வேண்டும் என்று ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன் என்று சொன்னால் நல்லது.  ஒருவர் ஒருநாளைக்கு எரிகின்ற தீபத்தில் எண்ணெய் ஊற்றினால் நல்லது.  ஒருவர் ஒருநாளைக்கு இந்த உடம்பைப் பற்றியும் ஆண்டவரைப் பற்றியும் சத்விசாரம் செய்தால் நல்லது.  இது போன்று பல சன்மார்க்க செயல்கள் இருக்கின்றது அவற்றில் ஏதேனும் ஒன்றை செய்து கொண்டு வந்தால் மிகவும் நல்லது.

 யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை
 யாவர்க்குமாம் பசுவுக்கு ஒருவாய் அருகு
 யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
 யாவர்க்குமாம் ஓர் இன்னுரை தானே
-- இது திருமூலர் வாக்கு.

 இப்பொழுது சன்மார்க்கம் விளங்கும் காலம்.  ஊருக்கு ஊர் இப்பொழுது சன்மார்க்க சங்கங்கள் செயல்பட துவங்கிவிட்டன.  இது தெருவுக்குத் தெரு மாற வேண்டும்.  வீடுகள்தோறும் விதி நெறி விளங்க ஆடல் செய்து அருளும் அருட்பெருஞ்ஜோதி என்று வள்ளலார் பாடுகின்றார்.  நீங்கள் நடந்து செல்லும் பாதையில் ஒரு ஓரத்தில் ஒருவர் அன்னதானம் செய்து கொண்டிருப்பார், ஒரு இடத்தில் வள்ளலார் படத்தை வைத்து பாடிக் கொண்டிருப்பார்கள், ஓரிடத்தில் வள்ளலார் பெயரில் சத்சங்கம் நடந்துகொண்டிருக்கும், இதுபோன்ற நிகழ்வுகளை பார்க்கும் பொழுது அவற்றை சாதாரணமாக கடந்து சென்று விடாதீர்கள்.  அந்த இடம் மிகவும் முக்கியமான இடம்.  அருள் விளங்கும் இடம்.  அங்குள்ள நிர்வாகத்தில் சில பல பிரச்சனைகள் தவறுகள் இருக்கலாம்.  ஆனால் அவற்றை பெரிதுபடுத்தாமல் இந்த செயல்களில் ஈடுபட்டவர்களை வணங்கி வாழ்த்த வேண்டும். 

 இரண்டு ஆண்டுகளாக இந்த வைரஸ் நோய் பிரச்சனையால் உலகம் முழுவதும் அனைத்து சாதி மத இன கோயில்கள் முழுவதும் நடை சாத்தப்பட்டது.  ஆனால் சன்மார்க்க சங்கங்கள் மூடப்படவில்லை.  சன்மார்க்கிகள் தங்கள் மனதை எப்பொழுதும் திறந்து வைத்துக் கொண்டே இருந்தார்கள்.  அவர்களுடைய செயல்பாட்டினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாக்கப்பட்டனர்.  இந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற நிகழ்வுகளை கோரக்கர் சித்தர் தனது பாடலில் பதிவு செய்து வைத்துள்ளார்.  அதில் சங்கங்கள் அமைத்து இறைவனை உண்மை வழிபாடு செய்வார்கள் என்று சன்மார்க்கி களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

 சன்மார்க்க சபையில் என்னை தனிக்க வைத்த தெய்வம்  இன்று வள்ளலார் பாடுகின்றார்.  ஆம்.  முழுமையான சன்மார்க்கத்தை அடைவதற்காக தான் நாமெல்லாம் இந்த செயல்களை செய்து கொண்டிருக்கின்றோம்.  சன்மார்க்கம் என்பது நமது உடம்புக்கு உள்ளே நடப்பது.  நம் உடம்புக்குள்ளேயே இது சரியாக நடக்க வேண்டும் என்றால் உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் நாம் சமமாக பாவித்து பழக வேண்டும்.

 கட்டுரை 10

 மூன்றாவது கண் சிவனுக்கு மட்டும்தானா?

எவ்வகையிலாவது தக்க ஆசாரியரை கொண்டு சீக்கிரத்தில் மூன்றாவது கண்ணை திறந்து கொள்ள வேண்டும்.  அப்படி திறந்து கொண்டால் அவனுக்கு பட்டப்பகல் வெட்டவெளிச்சமாக எல்லாம் புரியும், இன்று திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் நமக்கு தெரிவித்துள்ளார்.
 சிவபெருமான் புராணக் கதையில் உள்ள மூன்றாவது கண்ணுக்கும் வள்ளலார் கூறிய இந்த மூன்றாவது கண்ணுக்கும் தொடர்பு இருக்கிறதா?  இருக்கிறது.  அது தத்துவத்தைச் சொன்னது.  இது உண்மையைச் சொன்னது.

 தத்துவத்தில் சொல்லப்பட்ட மூன்றாவது கண் திறந்த பொழுது முருகப்பெருமான் பிறக்கிறான், மன்மதன் எரிக்கப் படுகிறான், நக்கீரர் எரிக்கப் படுகிறார்.  ஆக மூன்றாவது கண் திறந்து கொண்டால் ஐந்தொழிலையும் செய்யும் சித்தி நமக்கு கிடைக்கும் என்பது புரிகிறது.  மேலும் மூன்றாவது கண்ணை திறந்து கொண்டபிறகு எந்தவிதமான தவமோ அல்லது பாராயணம் செய்வதோ அல்லது எந்தவிதமான பிரயாசை எடுத்துக் கொண்டு எதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. 

 சிவபெருமானுக்கு மட்டுமல்ல, சிங்கப்பெருமாள் கோயில் உள்ள நரசிங்கப் பெருமாளுக்கும் மூன்றாவது கண் உள்ளது.   தேங்காயில் கூட மூன்றாவது கண் உள்ளது.  வள்ளலார் உரைநடையில் மிகத்தெளிவாக கூறியுள்ள விஷயம் என்னவென்றால் இறைவன் மற்றும் சமயத்தில் உள்ள தெய்வங்கள் எல்லாம் ஒவ்வொரு தத்துவங்களாக நமது உடலில் ஒவ்வொரு பாகத்திலும் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.  இதைத்தான் பேருபதேசத்தில், பிண்டத்தில் உள்ளதை அண்டத்தில் காட்டினார்கள் ( நம்மை ஏமாற்றிய சித்தர்கள்) என்றார் வள்ளலார்.

 அதுபோல் முக்கண் என்று சொல்வது முழுக்க முழுக்க மனிதரிடத்தில் இருப்பதுதான்.  கட்டுரையின் ஆரம்பத்தில் சொல்லியவாறு தக்க  ஆசாரியரை கொண்டு எங்கனம் மூன்றாவது கண்ணை திறந்து கொள்ள முடியும்?  ஆச்சாரியார்களை தேடி அலைய முடியாது.  தேடினாலும் கிடைக்க மாட்டார்கள்.  அண்ட சராசரங்களுக்கும் அப்பாலுள்ள இறைவன் இந்த சாதாரண உடலில் காரியப் படுவது போல்,  தக்க ஆச்சாரியன் மட்டும் இந்த உடலில் இல்லாமல் வெளியிலா இருப்பான்?  எல்லாமே இந்த உடலில் அடக்கம்.  ஏன் இங்கிருந்துதான் நாம் அனைவரையும் தேடவேண்டும், தரிசிக்க வேண்டும்.  வள்ளலாரே நம் உடம்பில் தான் உள்ளார்.  ஒவ்வொன்றும் தக்க அனுபவத்தில் வெளிப்படும்.

 மூன்றாவது கண் திறந்து கொண்டவர்களுக்கு பசி எடுக்காது. தாகம் எடுக்காது.  உடல் சோர்வு ஏற்படாது.  தூக்கம் வராது.  அதையும் மீறி யாராவது சாப்பிடுவதற்கு கட்டாயப்படுத்தினாலோ அல்லது தண்ணீர் அருந்த சொன்னாலோ அவ்வாறு சாப்பிடும் சாப்பாடு மற்றும் தண்ணீர் உடலுக்குள் சென்ற அந்த நிமிஷமே செரித்து ஆவியாகிவிடும்.  அவர்களுக்கு மலஜல உபாதை கிடையாது.

 இந்த மூன்றாவது கண்ணை திறந்து கொள்வதற்கு அடிப்படையாக இருப்பது புருவமத்தியில் நினைவை செலுத்த வேண்டும் என்று சொல்லப்பட்ட சகஜ நிஷட்டையே ஆகும்.

 கட்டுரை 11

 நடுவை நாடுங்கள்

இந்த உலகத்திற்கே ஒரு நடுவு மையம் உள்ளது.  அது என்ன?  எங்கே இருக்கிறது?

 இந்த உலகின் நடு மையம் அந்தந்த மனிதர்களின் நடுவாக விளங்குகின்றது.  இது தெரியாமல் பலர் பெரிய விஞ்ஞானிகளைப் போல உலகத்துக்கே நடுவானது  இந்தக் கோயில் அந்த கோயில் இன்று பல பலவாக பேசி கடைசியில் சிலர் வடலூரையும் விட்டுவைக்கவில்லை. வடலூர் தான் நடு மையம் என்றும் கூறுகிறார்கள்.

 உண்மையில் ஒவ்வொருவருடைய உடலின் நடுப்பகுதியே இந்த உலகின் மையமாக விளங்கும்.  இதுதான் உண்மையான நடு.

 நடுநாடி நடுநாடி நடமாடு பதியே
-- என்று வள்ளலார் ஒவ்வொரு மனித தேகம் எடுத்த மனிதர்களைப் பார்த்து கூறுகின்றார்.

 நாம் எப்பொழுதும்  நடுவு நிலையிலேயே இருக்க வேண்டும்.  நடுநிலையில் எப்படி நாம் இருக்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் கருணை, தயவு வேண்டும்.

 நடு நிலை இல்லா கூட்டத்தை கருணை நண்ணிடா  என்கின்றார் வள்ளலார்.

 திருவள்ளுவர் நடுவு நிலைமை என்று ஒரு அதிகாரத்தையே பாடியிருக்கின்றார்.

 திருமூலர் நடுவு நிலைமை என்ற தலைப்பின் கீழ் நான்கு பாடல்களை பாடியிருக்கின்றார்.  அதில் ஒன்றை மட்டும் இங்கு பார்ப்போம்.

 நடுவு நின்றார்க்கு அன்றி ஞானமும் இல்லை
 நடுவு நின்றார்க்கு நரகமும் இல்லை
 நடுவு நின்றார் நல்ல தேவரும் ஆவர்
 நடுவு நின்றார் வழி நானும் நின்றேனே

 மேலே சொல்லப்பட்ட நடு என்பதும் திருச்சிற்றம்பலம் என்பதும் சிற்றம்பலம் என்பதும் புருவமத்தி என்பதும் இது போன்று பல வாராய் அறிவிக்கப்பட்ட ரகசியங்களும் ஒரே பொருள் தான்.

 கட்டுரை 12

திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் ஆரம்ப காலத்திலிருந்து சித்தர்களால் வழிநடத்தப்பட்ட சித்தர் பாரம்பரியத்தைச் சேர்ந்த ஒரு மகான் ஆவார்.  அவர் முத்தர் எல்லாம் போற்றும் அருட்சித்தர் மகன் நானே என்று தன்னை அறிமுகம் செய்து கொள்கின்றார்.  அவருடைய வரலாற்றை படித்துப் பார்த்தால் அதில் பல சித்தர்களோடு தொடர்பு உடையதாக இருப்பது தெரியவரும்.  அவர் கருவுற்றதும் ஒரு சித்தரின் அனுக்கிரகத்தால் தான்.

 பரிபாஷை என்பது சித்தர்களால் பாடப்பட்ட சில ரகசிய குறியீடுகள்.  இதை ஆங்கிலத்தில் code என்று சொல்வார்கள்.  அதற்கு விடை decode என்பதாகும்.  பாமர மக்கள் இதை வெடி என்று சொல்வார்கள்.  ஒருவர் ஒரு வெடி போடுவார் அதற்கு மற்றவர் பதில் சொல்ல வேண்டும்.  அதற்கு வெடியை வெடித்தல் என்று பெயர்.  இந்தப் பழக்கம் தமிழ்நாட்டில் இன்றளவும் கிராமங்களில் புழங்கி வருகின்றது. 

 திருவருட்பாவில் சொல்லப்பட்ட பரிபாஷைகள் முழுவதும் அதிலேயே பதில் இருப்பதாக அமைந்துள்ளது.  சில பதில்கள் அடுத்த வரியிலேயே வரலாம்.  சில பதில்கள் அடுத்த பாடலில் வரலாம்.  சில பதில்கள் வேறொரு பதிகத்தில் இருக்கலாம்.  அதனை நாம் தான் கூர்ந்து நோக்கி தெரிந்து கொள்ள வேண்டும்.

8, 2
 வாசி
 வெண்ணிலா
 மயில், குயில்
 சிற்சபை, பொற்சபை, ஞான சபை, சபை
 நடம், நடனம், நடராஜர்
 சாகாத்தலை, வேகாக்கால், போகாப்புனல்
 நமச்சிவாய
 சிவாய நம
இன்னும் இது போல் எத்தனையோ பரிபாஷைகளை வள்ளலார் கூறியுள்ளார்.  இதுவே வள்ளலார் சித்தர் மரபில் வந்தவர் என்பதற்கான ஆதாரம்.

 உதாரணத்திற்கு ஒரு பாடலை எடுத்துக் கொண்டு அதில் வள்ளலார் பரிபாஷையும் அதற்கு விளக்கத்தையும் கொடுத்திருப்பதை நாம் பார்ப்போம்.

 சாகாத தலை அறியேன் வேகாத காலின்
 தரம் அறியேன் போகாத தண்ணீரை அறியேன்
 ஆகாய நிலை அறியேன் மாகாய நிலையும்
அறியேன் மெய்ந் நெறிதனை ஓர் அணுவளவும் அறியேன்

 இது பாடலின் முதல் நான்கு அடிகள்.

 சாகாத தலை = ஆகாய நிலை
 வேகாத கால் = மாகாய நிலை ( காற்று)
 போகாத புனல் = மெய்ந் நெறி
 இங்கே  மெய்ந் நெறி என்பது ஒழுக்க நெறி.  அதாவது விந்துவை வெளியிடாது நிற்கும் ஒழுக்க நெறி.

 இதுபோல் எல்லா பாடல்களையும் பொருத்திப் பார்க்க முடியாது. 
 இதை கிராமத்தில், காயும் கோணக்கா கொல்லுடா மச்சான், வெடியும் வெடித்து விட்டேன் சொல்லுடா மச்சான் என்று வேடிக்கையாகச் சொல்வார்கள்.

 இங்கே முழுமையான விளக்கத்தை தரமுடியாத நிலையில் இவற்றை குருமுகமாக அறிந்து கொள்ளுவது நல்லது.

 அகத்தியர் சித்தர் தான் எழுதிய அகத்தியர் பரிபாஷை திரட்டு 500 என்ற நூலில், பல பரிபாஷையை கூறி அதற்கு  விடையாக 25, 50 பொருள்களை கூறுவார்.  இதில் எந்த பொருள் நமக்கு சரியாக தெரிகிறதோ அதை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது அதன் உட்பொருள்.  அவரே இந்தப் புத்தகத்தை நிகண்டு என பலர் சொல்லுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.  அதைப்போலத்தான் வள்ளலார் கூறும் பரிபாசைகளுக்கு அவரவர் பக்குவத்திற்கு ஏற்றவாறு எந்த பொருள் தோன்றுகிறதோ அதை எடுத்துக்கொண்டு நமது அடுத்த பயணத்தை நோக்கி நகர வேண்டும்.  இது ஒவ்வொருவருக்கும் அவரவரின் அனுபவத்தின் கண் மாறுபட்டு நிற்கும். 


 இது தொடர்பான விரிவான விளக்கத்தை பிறிதொரு கட்டுரையில் பார்ப்போம்

 கட்டுரை 13

 திருவடி ரகசியம்

திருவடி என்பது ஒரு ரகசிய பொருளாக பன்னெடுங்காலமாக பெரியவர்களால் கூறப்பட்டு வருகிறது.  இதில் சமயம் தொடங்கி சன்மார்க்கம் வரை திருவடி என்பது எவ்வாறு கூறப்பட்டு வருகிறது என்பதை பார்ப்போம்.  வைணவ சமயத்தில் திருவடியை இரண்டு பிரிவுகளாக கூறுகின்றனர்.  அவை சிறிய திருவடி என்றும் பெரிய திருவடி என்றும் வழங்கப்படுகிறது.  சிறிய திருவடி என்பது அனுமன்.  பெரிய திருவடி என்பது கருடன்.  இவை இரண்டுமே நம் உடலில் உள்ள ஒரு தத்துவம்.  இரண்டுமே காற்றோடு தொடர்புடையது.  இதே வைணவ சமயத்தில் மகாபலி சக்கரவர்த்தி என்று ஒரு புராணக்கதை உண்டு.  வாமன அவதாரத்தில் மகாபலி சக்கரவர்த்தி மூன்றடி மண் கேட்க ஒருஅடி மண்ணையும் மற்றோர் அடியால் விண்ணையும் அளந்து நிற்க மூன்றாவது அடி எங்கே வைக்க என்று கேட்க தனது தலையை மகாபலி சக்கரவர்த்தி திருவடி வைக்க கேட்பதாக கூறப்படுவதும் உண்டு.  இதுவும் திருவடியைப் பற்றிய ஒரு ரகசிய செய்தியாகும்.  சைவ சமயத்தை எடுத்துக்கொண்டால் நடராஜரின் தூக்கிய திருவடியே இங்கே முக்கியமானதாக கருதப்படுகிறது.   இடதுகால் இராட்சதனின் மேல் அழுத்தி இருக்க வலது காலை தூக்கி வேகமாக நடனமாடி நிற்கும் நிலையில் இருப்பது திருவடியை பற்றிய ஒரு ரகசிய செய்தியாகும்.  மேலும் இதே சைவ சமயத்தில் மார்க்கண்டேயனுக்காக தனது இடது காலால் எமனை உதைத்தது அனைவரும் அறிந்த கதையாகும்.  இதுவும் திருவடியைப் பற்றிய ஒரு ரகசிய குறிப்பாகும்.  இந்த பூமி இறைவனின் திருவடி,  இந்த ஆகாயம் இறைவனின் திருமுடி என்றார் கிறிஸ்தவ சமய வேதாந்த ஞானி இயேசுநாதர்.  புதிதாக ஒரு இடத்திற்கு செல்லும் பொழுது மங்களம் உண்டாகும் பொருட்டு வலது காலை எடுத்து வைத்து செல்வது ஒரு பழக்கமாக தமிழர்களிடம் இருந்துள்ளது.  மணமகளே மணமகளே வா வா உன் வலது காலை எடுத்து வைத்து வா வா என்பது கவிஞனின் பாட்டு.  இதில் சொல்லப்படும் வலதுகால் மூச்சு சம்பந்தப்பட்ட ஒரு விஷயமாக கூறப்பட்டது.  வள்ளலாரும் வலது நாசியில் எப்போதும் மூச்சு விட்டு இருப்பதை பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று சொல்கின்றார்.  இதனால்தான் இரவில் படுக்கும்போது இடதுகைப் பக்கமாக ஒருக்களித்துப் படுக்க வேண்டும் என்று கூறுவார்.  இதனை யோகநித்திரை என்று சித்தர்கள் கூறுவர்.  மூலாதாரத்தில் மூண்டெழும் கனலை காலால் எழுப்பும் கருத்தறி வித்தே என்பது அவ்வையார் பாடல்.  இப்படியாக இறைவனின் திருவடியை பெற்றவர்கள்தான் அடியார்கள் என்றும் அடிகள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். திருவள்ளுவர் தனது பாயிரத்தில் உள்ள முதல் பத்து பாடல்களில் ஏழு பாடல்களில் திருவடியின் பெருமையை கூறுகிறார்.   திருமூலர் திருமந்திரத்தில் திருவடிகளைப் பற்றி ஏராளமான பாடல்கள் பாடப்பட்டுள்ளது.  சிவபுராணத்தில் மாணிக்கவாசகர் 27 முறை இறைவனின் திருவடிகளை பாராட்டி மகிழ்கிறார். வள்ளலாரும் திருவடிப்புகழ்ச்சி, திருவடிப் பெருமை என திருவடிகளைப் பற்றி நிறைய பாடல்கள் பாடியிருக்கின்றார்.  பல சித்தர்கள் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள இந்த முழு உடலையே திருவடி என கூறியிருக்கின்றனர்.  திரு என்றால் உடல் என்றும் ஒரு பொருள் உண்டு.  எனவே நமது இந்த உடலே ஆண்டவனின் திருவடி என கருத வேண்டும்.  இந்த உடலை ஒழுக்கத்தோடு காப்பாற்றிக் கொள்வதே இறைவனுக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடன்.

 வாழ்கவே வாழ்க என் நந்தி திருவடி
 வாழ்கவே வாழ்க மலம் அறுத்தான் பதம்
 வாழ்கவே வாழ்க மெய்ஞ்ஞானத் தவன் தாள் 
 வாழ்கவே வாழ்க மல மிலான் பாதமே
-- திருமூலர் திருமந்திரம் கடைசி பாடல்.

 14

ஏற்கனவே நாம் சிந்தனை செய் மனமே என்ற தலைப்பில் ஒரு சத்
விசாரணை பார்த்தோம் அதன் தொடர்ச்சியாக இந்த இரண்டாம் பாகம் கட்டுரை வெளியிடப்படுகிறது 

இறை சிந்தனையை நமக்கு ஏற்படுத்தாமல் தடுக்கக்கூடிய மலங்கள் முக்கியமாக மூன்று உள்ளது.  அவை ஆணவம் கன்மம் மாயை.  இந்த மூன்று மலங்களுள் கன்மம்  என்ற மாயைதான் முக்கியமாக நமது சிந்தனையை கபளீகரம் செய்யக்கூடிய ஒன்றாகும்.  இந்த கன்மத்திற்கு கர்மம் (கருமம் ) என்றும் ஒரு பெயர் உண்டு.


 நாம் குழந்தையாக பிறந்ததில் இருந்து வளர வளர நிறைய வேலைகளை செய்து கொண்டே இருக்கின்றோம்.  இந்த வேலைகளில் தான் நமது முழு கவனமும் இருந்து வருகிறது.  படிக்கின்ற காலத்திலேயே படிப்பே நமக்கு மிகப்பெரிய கர்மமாக இருக்கிறது.  நமது கவனம் முழுவதும் படிப்பிலேயே செலுத்தி அதில் வெற்றி பெற்றிருக்கின்றோம்.  அதற்குப் பிறகு வேலை தேடும் படலம்.  வேலை கிடைத்தவுடன்,  அதில் முழுமூச்சாக இறங்கி சதா அதே நினைவுடனே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.  இங்கே முழுவதுமாக இறை சிந்தனை மழுங்கடிக்கப்படுகிறது.  இந்த மாதிரி நிலையில் சமயவாதிகள் தங்களுடைய வயிற்றுப் பிழைப்புக்கு நம்மை சுலபமாக வீழ்த்தி விடுகின்றார்கள்.  ஏதோ கோயிலுக்கு போனோமா அர்ச்சனை செய்தோமா என்று இதிலேயே நமக்கு அருள் கிடைத்து விடும் என்று நம்பிக் கொண்டு இருக்கின்றோம். இது உண்மையான வழிபாடு ஆகாது.  உண்மையான வழிபாடு என்பது, நான் யார்? என்னை படைத்த கடவுள் யார்? எங்கே இருக்கிறார்? எப்படி செயல்படுகின்றார்? என்று ஆண்டவருடைய சொரூப ரூப சுபாவங்களை தெரிந்து கொள்வதே உண்மை வழிபாடாகும்.  இதற்கெல்லாம் முக்கிய தடையாக இருப்பது கருமம்.  எனவேதான் திருமூலர்


 வேண்டார்கள் கன்மம் விமலனுக்கு ஆட்பட்டோர் -- என்று சொல்கிறார்.


 இறைவனை நினைப்பதையே சதாசர்வகாலமும் தொழிலாகக் கொள்ள வேண்டும் என வள்ளலார் கூறுகின்றார்.  அதை உணர்த்தும் பொருட்டு கீழ்க்கண்ட பாடலைப் பாடுகின்றார் :


 காடுவெட்டி நிலம் திருத்திக் காட்டு எருவும்  போட்டுக்

 கரும்பை விட்டு கடு விரைத்து களிக்கின்ற உலகீர்

 கூடுவிட்டு போயினபின் எதுபுரிவீர் இங்கே

 குடியிருப்பீர் ஐயோ நீர் குறித்தறியீர் இங்கே

 பாடுபட்டீர் பயன் அறியீர் பாழ்க்கு இறைத்துக் கழித்தீர்

 பட்டதெல்லாம் போதும் இது பரமர் வரு தருணம்

 ஈடுகட்டி வருவீரேல் இன்பம் மிகப்பெறுவீர்

 எண்மை உரைத்தேன் அலன் நான் உண்மை வைத்தேனே.


 வேலையை சிந்தித்துக் கொண்டு இருப்பவனுக்கு வேலை கிடைத்துவிடும்.


 பணத்தை சிந்தித்துக் கொண்டு இருப்பவனுக்கு பணம் கிடைத்துவிடும்.


 காதலியை சிந்தித்துக் கொண்டிருப் பவனுக்கு காதலி கிடைத்து விடுவாள்.


 வீட்டைக் கட்டி முடிக்க வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டு இருப்பவனுக்கு வீடு கிடைத்துவிடும்.


 மரணத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டு இருப்பவனுக்கு மரணம் வந்துவிடும்.


 கடவுளைப் பற்றி சிந்தித்துக் கொண்டு இருப்பவனுக்கு கடவுள் கிடைத்து விடுவார்.


 எதை நினைக்கின்றோமோ அதுவே கிடைத்து விடுகின்றது.  சிந்தை என்ற ஒன்றே தெய்வம் ஆகிவிட்டால் சிந்தித்துக் கொண்டிருப்பவனே தெய்வமாகி விடுகின்றான்.


 எங்கெங்கு இருந்து உயிர் ஏதேது வேண்டினும் அங்கங்கு இருந்தருள் அருட்பெருஞ்ஜோதி 


 தீவினை அகன்றிட கன்மத்தை விட்டு இறைவனை சிந்தை செய்வோம் புதியதோர் சன்மார்க்க உலகம் படைப்போம் 



Saturday, 15 December 2018

மொழியரசி அம்மா சொற்பொழிவு

திருமதி மொழியரசி அசோகன் அவர்கள் கே.கே.நகர் வள்ளலார் சன்மார்க்க சங்கத்தில் 11/12/18 அன்று ஆற்றிய உரையின் இரு பகுதிகள் தலைப்பு: மனமடங்கும் திறன்

கீழே உள்ள லிங்க்கை தொட்டால் சொற்பொழிவு தொடங்கும்

https://youtu.be/oQKReYrLkp8

பகதி-2

https://youtu.be/GORLUmwkbW8


https://drive.google.com/file/d/1fUkSJxBab5L1WvnbyXNLqkMFDtEbwqvs/view?usp=drivesdk

Friday, 14 December 2018

சில சன்மார்க்க சொற்பொழிவுகள்

https://youtu.be/OtlhqduVrx8

மகாதேவன்
https://youtu.be/uzf7_A55TnE

மலேசியா தர்மலிங்கம்
https://youtu.be/hcsktJPAC2s

கோவை சிவபிரகாசமம்
https://youtu.be/ue9FAUniCnk

APJ அருள்
https://youtu.be/mH7fDkO0NHM

நல்லூர் சரவணன்
https://youtu.be/3m2jCSH5eEM

Thursday, 19 October 2017

GREAT SERMON by Vallalar


Further more,  let us not put our belief or faith and goal in the philosophical Art's and stories such as VEDAS, AHAMAS, ITHIHASA etc.   Because,  in these books of imaginary arts,  only symbolic and hidden Truths are erotic without revealing the real facts,  the authors had veiled and obscured the truth,  as though somebody is covering with soil and dust (over the death body).  Even without revealing with a little atomic measure,  they had symbolically represented the micro-cosmic. (Pindami-Nature superimposed upon the micro-cosem (Andam).
For example,  the false authors had named the Almighty as "KAILASAPATHI", "VAIKUNTAPATHI"  and "SATHYA YOKAATHIPATHI" and also imaginary constructed the proper shrine,  the vehicle. (VAAHANAM, WEAPONS,  ARPUTHAM).  The inner mould (VADIVAM), the external form "RUPAM" etc., exactly like a human being and even forgetting the truth, they had expressed the imagination itself as truth.  If anybody enquires, "Does the divine God possess hand and legs similar to a human being? ".  They hesitate and get be wildered without knowing to reply.   The latter followers, calling or naming themselves as great men,  had puff led and bluffed nonsense things by closing their eyes of Truth vision.
But the ancient one who had covered and hidden the Para Truth was a great Adept or genius and powerful person.   Till now,  nobody had discovered any found out what he had veiled and hidden,  what he had looked or covered,  no one had struck and broken the lock that he had sealed .......

Monday, 3 July 2017

Thiruvarutpa in English

My Lord!

Thou, the Companion of my mother's womb!
Thou, the Amritha of my melting heart!
Thou, the Light of mine eyes!
Thou, the Delight of my thoughts!
Thou, the Beauty of form!
Thou, the Kinsman of my life!
Thou, the Bliss of my feelings!



Thou, the Ineffable Master who alone owns me!
Thou, the God who,  in utter composition, bestowed the Supreme Siddhi of perfect wisdom on me,
Thou, the Whilst yet a boy playing in the street!

     By the Light of Thy Grace,  O my mother, I thus announce by the word of mouth as if by the beat of a thousand drums :
O ye, men, women, children, and myriads  and myriads of lives all the world over!   The time is come for all of us to live and breathe in intimate union with our Lord and Master as the living members of His Divine Family.
---Thiruvarutprakasa vallalar