இந்த உலக மக்கள் அனைவரையும் சன்மார்க்க சங்கத்திற்கு அடை வைத்திட திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் தோன்றினார். அதே முயற்சியில் நாம் இருந்தால்தான் நாமும் வள்ளலாருக்கு உறவினராகவும் தொண்டர்களாகவும் இருக்க முடியும். ஆனால் நம்மில் பலர் சன்மார்க்கத்தை பரப்புகின்றேன் இன்று சொல்லிக்கொண்டு செல்கின்ற இடத்தில் எல்லாம் சமய நெறிகளையும், வேறு பல மார்க்கங்களையும் ஆதரித்து பேசிவிட்டு வருகிறார்கள். அதற்கு காரணம் பணம். பணவசூலில் ஈடுபட்டிருக்கும் சன்மார்க்கிகள், இடத்திற்கு தகுந்தவாறு பேசினால் தான் நமக்கு நல்ல சன்மானம் கிடைக்கும் என்று எதை எதையோ பேசி உளறி விட்டு வருகிறார்கள். சன்மார்க்கத்தை சன்மானத்தில் அடகு வைத்து விடுகிறார்கள். வள்ளலார் ஆரம்ப காலத்தில் சமயத்தில் இருந்தது போல் தோன்றும். ஆனால் ஒரு நாளும் அவர் சமயத்தை ஆதரிக்கவில்லை. கொலை, புலை ஆகியவை இந்த உலகத்திலே ஒரு சமயத்தில் ( பேர் மட்டும் சைவ சமயம் ) அதிகமாக இருந்தது. அவர்களை திருத்தி நல்வழிப்படுத்துவதற்காகவே அவர் சமயத்தில் இருப்பது போல் தோற்றத்தை காட்டினார். இந்த சமயத்தையும் வள்ளலார் ஆதரிக்கவில்லை என்பதற்கு அவர் எழுதிய திருவருட்பாவிலே நிறைய சான்றுகள் உள்ளன. அரை நிமிடத்தில் ஆயிரம் பணக்காரர்களை என்னால் அது அதிட்டிக்க (உருவாக்க ) முடியும் என்று வள்ளலார் கூறுகின்றார். அப்படி இருக்கும் பொழுது அவர் மேல் நம்பிக்கை வைக்காமல் பணத்தில் மேல் மட்டும் நம்பிக்கை வைத்து சன்மார்க்கிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவரிடம் கேட்டால் கேட்டதை விட அதிகம் கொடுப்பார், என்பதை யாரும் உணரவில்லை.
எல்லாம் செயல் கூடும். என் ஆணை. அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து. தில்லை திருமாவளவன்
9840348094
No comments:
Post a Comment